Connect with us

Cinema News

ஸ்ருதியை காப்பாத்திய மீனா..! வீட்டுக்கு செல்ல ஓகே சொல்லியாச்சு… இனி சண்டை களைக்கட்டுமோ?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியும் மீனாவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ரவி எப்ப பாரு குடும்பம் தான் சொல்றான் என்கிறார். அவர் எங்க மாமா வளர்ப்பு. எப்படி மாறுவாரு. அவரு குடும்பத்தினை விட்டு கொடுத்தா தான் நீங்க யோசிக்கணும்.

அவருக்கு நீங்களும் வேணும். குடும்பமும் வேண்டும் என்கிறார் மீனா. எங்க அம்மா, அப்பாலாம் தனியா தானே இருக்காங்க என்கிறார் ஸ்ருதி. தொடர்ந்து அவர் அப்படியே பேசிக்கொண்டு இருக்க. மீனா கடுப்பாகி நான் சொல்வது உங்களுக்கு புரியாது எனக் கூறி எழுந்து சென்றுவிடுகிறார்.

இதையும் படிங்க: உங்கள மாதிரி அமீர் ஒண்ணும் பிட்டு படம் எடுக்கல!.. ஞானவேல் ராஜாவை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்!..

இதை தொடர்ந்து வாசலில் பிஜூ தன்னுடைய ஆட்களுடன் நிற்கிறார். அவர்கள் ஸ்ருதியை பிடித்துக்கொள்ள அவர் மீது ஆசிட்டை அடிக்க வருகிறார் பிஜூ. இதனால் ஸ்ருதி மிரண்டுப்போய் நிற்கிறார். ஆனால் மீனா செங்கலை எடுத்து அடித்து ஆசிட்டை கீழே விழ செய்கிறார்.

இதை தொடர்ந்து அந்த ஆட்களை அங்கிருப்பவர்கள் அடித்து துரத்தி விடுகின்றனர். மீனா தனியா தான் இருப்பேனு சொன்னீங்களே. இப்போ பாருங்க. ஒன்னா இருந்தா தான் இதுமாதிரி பிரச்னையில்லாம வந்தாலும் தவிர்த்து இருக்க முடியும் என்கிறார். இதை தொடர்ந்து ஸ்ருதியை அழைத்து கொண்டு போய் அவர் வீட்டில் விட செல்கிறார் மீனா.

இதையடுத்து அங்கு காபி போட்டு ஒன்னா இருப்பது தான் நல்லது என்கிறார். ஆனால் ஸ்ருதி உங்க வீட்டுக்காரர் என இழுக்க அவர் பாக்கத்தான் அப்படி. ஆனா பழக நல்ல மனுஷன் தான் என்கிறார். ரவி வந்து ஸ்ருதியை பார்த்து எப்படி இருக்க? எதுவும் அடிப்பட்டுச்சா என விசாரிக்கிறார். ஸ்ருதி இல்லை மீனா காப்பாத்திட்டாங்க என்கிறார்.

இதையும் படிங்க: அது வேற வாய்!.. இது நாற வாய்.. மீண்டும் கிளம்பிய சூப்பர்ஸ்டார் சர்ச்சை.. இந்த வாட்டி மாட்டியது இவரா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top