முதல் நாள் கள்ளழகர் பட ஷூட்டிங்! மறுநாள் விஜய் பட சூட்டிங்.. என்ன நடந்துச்சுனா? கேப்டன் குறித்து வையாபுரி சொன்ன தகவல்

Published on: December 30, 2023
vaiya
---Advertisement---

Captain Vijayakanth: ஏழைகளின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். எம்ஜிஆர் மற்றும் கலைஞர் இவர்களின் மீதுள்ள பற்றின் காரணமாக அவர்களின் பெயர்களின் பாதிப் பெயரை எடுத்து புரட்சிக்கலைஞர் என வைத்துக் கொண்டார்.

விஜயகாந்தைப் பற்றி நடிகர் வையாபுரி பல தகவல்களை கூறினார். வையாபுரி கல்யாணத்திற்க்கு வந்து தாலி எடுத்துக் கொடுத்தாராம் விஜயகாந்த். அதுமட்டுமில்லாமல் தேர்தலில் விஜயகாந்த் ஜெயித்ததும் அவரை பார்க்க வையாபுரி குடும்பத்தோடு சென்றாராம்.

இதையும் படிங்க: அடங்கப்பா.. நம்புங்கையா.. தவசி படத்துக்கு சீமானா வசனம்? உண்மையை உடைத்த இயக்குனர்..!

அதற்கு விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து விட்டாயா? என்று கேட்டாராம். இல்லை. முதலில் உங்களை சந்தித்த பிறகு போகலாம் என இருக்கிறேன் என்று சொல்ல அதற்கு விஜயகாந்த் இல்ல.. இல்ல முதலில் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு என்னை வந்துப் பார் என்று சொல்லி அனுப்பிவைத்தாராம்.

இப்படி வாழும் வரை மற்றவர்களுக்கு நல்லவனாகவே வாழ்ந்தார் விஜயகாந்த். மேலும் வையாபுரி கள்ளழகர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம்.அந்த நேரத்தில் மிகவும் பீக்கில் இருந்தவர் வையாபுரி. அந்தப் படத்தின் ஒரு பாடலை மூன்று நாள்கள் படமாக்கிக் கொண்டிருந்தார்களாம்.

இதையும் படிங்க:விஜயகாந்த் உடன் 57 முறை நேரடியாக மோதிய சத்யராஜ் படங்கள்… ஜெயித்தது யாரு புரட்சி கலைஞரா… புரட்சித்தமிழனா?

மறு நாள் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் சூட்டிங்கும் நடந்ததாம். அதிலும் வையாபுரி நடிக்க உடனே விஜயகாந்த் ‘இந்தப் படத்திற்கான சூட்டிங் முடிய லேட் ஆகும். ஆகவே நீ முதலில் அந்தப் படப்பிடிப்பை முடித்து விட்டு வா ’ என சொல்லி ஒரு காரில் அனுப்பி வைத்தாராம்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.