அஜித்தை அப்போதே அரசியலுக்கு அழைத்த ஜெயலலிதா!.. அதற்கு இதுதான் காரணமாம்!..

Published on: February 5, 2024
JJ-Ajith
---Advertisement---

விஜய் தமிழக வெற்றி கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்ததுமே சமூக வலைதளங்களும், ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வெளியிட்டு வந்தன. அவர் அரசியலில் குதிக்க என்ன காரணம்? வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை பிரபல பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத நபர் கலைஞர் கருணாநிதி. அவர் அரசியலுக்கு வந்த நாள் முதல் பத்திரிகையில் அவர் செய்தி வராத நாளே இல்லை. விஜய் சினிமாவில் நல்ல பேக்ரவுண்டை வைத்துள்ளார். அரசியலில் அவருக்கு அப்படி இருக்கா என்பது தெரியவில்லை. ஒரு கட்சியின் தலைப்பைப் பார்த்ததுமே அவரது கொள்கையை அதில் சொல்ல வேண்டும். விஜய் என்ன காரணத்திற்காக இந்தத் தலைப்பை வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.

Vijay
Vijay

விஜயைப் பொருத்தவரை தலைவா படத்தோட பிரச்சனையில் இருந்து அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார். அப்போது தான் அவருக்கு அழுத்தம் அதிகமானது. சினிமாவில் நிறைய பணம் சம்பாதித்து உயரத்தில் இருந்தாலும் ஒரு பவர் இருக்க வேண்டும். அது இருந்தால்தான் வாழ முடியும் என்ற இடத்திற்கு விஜய் தள்ளப்பட்டு விட்டார். இது நடந்தது ஜெயலலிதா ஆட்சி காலம்.

அதனால் என்னை வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார். இவர் வந்து இலை அரசியலைத் தாண்டி மக்கள் மத்தியில் நெருங்கிப் போனார் என்றால் இவர் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

Vijay
Vijay

விஜய்க்கு சரியான வழிகாட்டுதல்கள் அரசியலில் இல்லை. விஜய் முழுநேர அரசியல்வாதி ஆனதும் தினம் தினம் பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும். அஜீத்தின் திருமணத்தின் போது ஜெயலலிதா நீண்ட நேரமாக இருந்தாராம். அவரை ஜெயலலிதாவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.

ஒரு கட்டத்தில் அஜீத்தை கட்சியில் இணைப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தாராம். ஆனால் அவர் மறுத்துவிட்டாராம். அஜீத் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியதுமே அவரை வாழ்த்தியிருப்பார். அஜீத்தும், விஜயும் குடும்ப நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ள ஆட்சியில் என்ன தவறுகள்? அதை எப்படி நிவர்த்தி செய்யப் போகிறார் என்பது தான் விஜயின் அரசியல் மக்கள் மத்தியில் பேசப்படும். கார்த்திக் சுப்புராஜின் படம் தான் விஜயின் கடைசி படமாக இருக்கும். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தெரிவித்துள்ளார்.