முயற்சியிலேயே இருக்கும் ‘விடாமுயற்சி’! அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ஆதிக்.. இதுதான் இள ரத்தம்-ங்கிறது

Published on: April 5, 2024
adhik
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது அஜித் விடாமுயற்சி படத்திற்கான வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு எப்பொழுதோ முடிய வேண்டியது. ஆனால் ஒரு வருடம் கடந்த நிலையில் 60 சதவீத படப்பிடிப்புதான் நடந்து முடிந்திருக்கிறது. அதுவும் அஜர்பைஜானில் ஏற்பட்ட்ட கடுமையான பனிப்பொழிவு காரணமாகவும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இன்னொரு பக்கம் விடாமுயற்சி படத்தை லைக்காதான் தயாரிக்கிறது. லைக்காவிற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை என்ற செய்தியும் வெளியானது. ஒரே நேரத்தில் இரு பெரும் நடிகர்களின் படங்களை நடத்திக் கொண்டிருக்கும் லைக்கா பணப்பிரச்சினையை சமாளிக்க முடியாமல்தான் முதலில் ரஜினியின் வேட்டையன் படம் மீது கவனத்தை திருப்பியது.

இதையும் படிங்க: வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. வடிவேலு – பார்த்திபன் காம்போவில் பட்டையைக் கிளப்பிய படங்கள்!..

வேட்டையன் திரைப்படமும் முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்தாக விடாமுயற்சியை ஆரம்பிக்கும் பணியில் படக்குழு இறங்குகிறது. விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தேர்தலுக்கு பிறகு நடத்தவுள்ளதாக விடாமுயற்சி படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு மத்தியில் ஆதிக் ரவிச்சந்திரன் அதிரடியாக அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் போஸ்டரை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஏற்கனவே மார்க் ஆண்டனி என்ற படத்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க போகும் படத்தின் மீது தானாகவே ரசிகர்களின் பார்வை பட்டது. அந்த நிலையில்தான் அஜித்துடன் கூட்டணி என்று அறிவிப்பு வெளியானதும் எதிர்பார்த்ததையும் தாண்டி ஆதிக் – அஜித் கூட்டணி மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: அந்த வடிவேலு படத்தில் நடிக்க வேண்டியது விஜயா?!.. படம் வேறலெவலா இருந்திருக்குமே!…

விடாமுயற்சி படம் என்ன ஆனாலும் சரி குட் பேட் அக்லி சொன்ன தேதியில் ரிலீஸாகும் என்ற முனைப்பில் ஆதிக் இறங்கியிருக்கிறார். வரும் ஜூன் 13 ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறாராம் ஆதிக். அதுவும் வெளி நாட்டில் படப்பிடிப்பு என்றார்கள். ஆனால் ஆரம்பமே சென்னையில்தான் என்ரூ சொல்கிறார்கள். சென்னை ஈவிபி சிட்டியில்தான் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்களாம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.