Connect with us
ambika

Cinema News

வயித்துப் பொழப்புக்கு என்ன செய்ய? வாய்ப்பு இல்லாமல் சினிமா டு சீரியலுக்கு தாவிய நடிகர்கள்

Serial Actors:பெரும்பாலான நடிகர்கள் சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கின்றனர். ஆனால் சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்த நடிகர்களை பற்றி தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். சின்னத்திரை நடிகர்களின் பெரும்பாலான கனவு எப்படியாவது சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் வாய்ப்பு கிடைத்து விடாதா? அதன் மூலம் ஒரு பிரபலமான நடிகராக மாறிவிட மாட்டோமா என்ற ஒரு பெரிய கனவில் தான் இன்று வரை இருந்து வருகிறார்கள்.

ஆனால் சினிமாவில் சாதித்து ஒரு கட்டத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறைந்து அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் சீரியலுக்கு வந்த நடிகர்கள் யார் யார் என்பதை பற்றி தான் இதில் நாம் பார்க்க இருக்கிறோம். முதலில் முதலாவதாக நடிகை அம்பிகா .80கள் காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் கட்டுக்குள் வைத்தவர் அம்பிகா. முன்னணி நடிகையாக ரஜினி கமல் என பிரபல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ஒரு புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர்.

இதையும் படிங்க: சிம்புவை தொடர்ந்து ஐசரி கணேஷை செஞ்சு விட்ட ஹிப் ஹாப் ஆதி!.. பிடி சார் வசூல் இவ்வளவு தானா?..

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவருக்கு என இருக்கும் அந்த கிரேஸ் குறைய குறைய அம்மா ரோல்களில் நடித்து இப்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக சின்னத்திரையில் மாமியாராகவும் அம்மாவாகவும் என முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக சுந்தர்ராஜன். இவரும் நகைச்சுவை நடிகராக அதையும் தாண்டி 80கள் காலகட்டத்தில் பல படங்களை இயக்கி ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்தவர் .

விஜயகாந்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். அந்தப் படத்தை இயக்கியவரும் சுந்தர்ராஜன் தான். சரத்குமார் சத்யராஜ் பிரபு என இவர்களுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகவும் இருந்து வந்தார். இப்போது அவரை எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: 

சின்னத்திரை பக்கம் தலை காட்டி வருகிறார் சுந்தர்ராஜன். அடுத்ததாக பிரவீன் ஆதித்யா. அப்புச்சி கிராமம் என்ற படத்தில் புகழ்பெற்ற பாடலான என் கண்ணுக்குள்ள ஒருத்தி என்ற பாடல் இன்று அனைவருடைய ரீல்ஸ் பாடலாக அமைந்து வருகிறது .அந்த ஒரு பாடல் மூலம் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் .அதில் நடித்த பிரவீன் ஆதித்யா அவர் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் என்ற சீரியலில் வேலுவாக நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இவரும் சினிமாவில் நடிக்க பல ஆண்டுகள் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்க இடையில் ஒரு விபத்தில் சிக்கியதனால் அவரால் எந்த ஒரு முயற்சியும் செய்ய முடியாத சூழ்நிலை. அந்த நேரத்தில் தான் இந்த தொடரில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது .அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு மிகத் திறமையாக நடித்து வருகிறார் பிரவீன் ஆதித்யா.

இதையும் படிங்க: கருடன் மெயின் வில்லனே இவர்தானா!.. அடேங்கப்பா அந்த சீனையே ஸ்னீக் பீக்கா விட்டுட்டாங்களே!..

அடுத்ததாக ரஞ்சித். 90கள் காலகட்டத்தில் வில்லன் ஆகவும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் சில படங்களில் குணசித்திர நடிகராகவும் நடித்தவர் ரஞ்சித். நடிகை பிரியா ராமனின் கணவர் தான் இவர். அந்த நேரத்தில் இவரும் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக தான் இருந்து வந்தார். அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வாய்ப்புகளும் இவருக்கு வராததால் திடீரென சீரியல் பக்கம் நுழைந்தார் .

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி  சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரஞ்சித் .இருந்தாலும் சமீபத்தில் ஒரு படத்தை இயக்கி இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார் ரஞ்சித்.

google news
Continue Reading

More in Cinema News

To Top