Connect with us

Cinema News

மெட்ராஸ் படம் எடுத்துட்டா என்ன வேணாலும் பேசுவியா!.. பா. ரஞ்சித்துக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்!..

மெட்ராஸே நாங்க தான்னு கூவுனா அப்போ நாங்களாம் யாருடான்னு பா. ரஞ்சித்துக்கு இயக்குனர் மோகன். ஜி பதிலடி கொடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில், பா. ரஞ்சித் தொடர்ந்து கொதித்து எழுந்து திமுகவுக்கு எதிராக தனது கருத்துக்களை அடுக்கி வருகிறார்.

இந்நிலையில், பா. ரஞ்சித்தின் பேச்சுகளுக்கு திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன். ஜி பதிலடி கொடுக்கும் விதமாக காட்டமாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள்… கமல், ரஜினி, விஜய், அஜீத் எந்தெந்த இடம்னு தெரியுமா?

பா. ரஞ்சித், தெருக்குரல் அறிவு உள்ளிட்டோர் எல்லாம் தலித்துகள் தமிழ்நாட்டில் நிம்மதியாகவே வாழ முடிவதில்லை என்றும் எப்போது கொல்லப்படுவோம் என்றே தெரியவில்லை என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் உள்ள பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது காரியம் இன்று நடைபெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா. ரஞ்சித் ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: டி.எஸ்.பாலையா மகன் வெற்றி பெறாமல் போனதற்கு இதுதான் காரணம்!.. உண்மையை உடைத்த பிரபலம்

பா. ரஞ்சித் திருமாவளவனுக்கு எதிரான கண்டனத்தை வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், திருமாவளவனுக்கு ஆதரவாக இருப்போம் என்றும் பேசியுள்ளதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்திருந்தார்.

இந்நிலையில், மோகன் ஜி பேசிய கருத்துக்களையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். மெட்ராஸ் படத்தை எடுத்து விட்டால் மெட்ராஸ் உங்களுடையதாகி விடுமா? ஆளாளுக்கு மெட்ராஸ் நாங்கதான்னு கூவுறிங்க அப்போ நாங்களாம் யாருடான்னு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: போஸ்டர் கூட ஒட்டல!.. ஆனாலும் பாக்கியராஜ் செய்ததோ மகத்தான சாதனை… எந்தப் படம்னு தெரியுமா?

 

google news
Continue Reading

More in Cinema News

To Top