Connect with us
suruli

Cinema History

சுருளிராஜன் அப்படிப்பட்டவரா? மனைவி கொடுத்த அதிரடி பேட்டி..

Surulirajan: தமிழ் திரையுலகில் தனித்துவமான குரலால் காமெடியில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுருளி ராஜன். எத்தனையோ காமெடி நடிகர்கள் இந்த தமிழ் சினிமாவில் இருந்தாலும் இவருக்கென என்றென்றைக்கும் காமெடி நடிகர்கள் வரிசையில் ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்யும். மதுரை பெரிய குளத்தை சார்ந்த சுருளி ராஜன் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு இந்த சினிமாவிற்குள் வந்தவர்.

மிகக் குறுகிய காலமே வாழ்ந்து நிறைய படங்களில் நடித்து மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் எம்ஜிஆர் உடன் இரண்டே படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார். அதுவும் ஒரு துணை நடிகராக மட்டும் தான் நடித்திருந்தார். எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் நான் ஆணையிட்டால் பாடலில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே தோன்றி இருப்பார் சுருளிராஜன்.

இதையும் படிங்க: வாயா பேசுற நீ? திரிஷாவுக்கு கவுண்டர் கொடுத்த உதவி இயக்குனரை நடிக்க வைத்த மணிரத்னம்!..

அது கூட சுருளிராஜன் இறந்த பிறகு தான் அந்த காட்சியில் அவர் இருந்தது  சுருளிராஜனின் மனைவிக்கு தெரியுமாம். அதே போல் என் அண்ணன் படத்தில் ஜெயலலிதாவிற்கு ஒரு காட்சியில் தண்ணீர் கொடுக்கும் மாதிரியான காட்சியில்  நடித்திருப்பாராம் சுருளிராஜன். மற்றபடி ஜெய்சங்கர் ரஜினி இவர்களின் படங்களில்தான் சுருளிராஜன் அதிகமாக நடித்திருப்பார்.

ஜெய்சங்கர் மற்றும் ரஜினியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர் சுருளி ராஜன். ரஜினியின் வெற்றிக்கு பல படங்கள் காரணமாக இருக்கும் வகையில் அந்த படங்களில் எல்லாம் சுருளிராஜனும் இருப்பார் .அதேபோல் ஜெய்சங்கர் முதன்முதலில் அறிமுகமான இரவும் பகலும் படத்தில் சுருளிராஜனை நடிக்க வைத்ததே ஜெய்சங்கர் தானாம்.

இதையும் படிங்க: வா வா டியரு பிரதரு… கேப்டனுக்காக கோட் படக்குழுவினர் செய்த செம மேட்டரு இதான்!

அதனால் தான் அந்த படத்தில் இருந்து இருவருக்குமான நட்பு ஆரம்பித்தது. இந்த நிலையில் சுருளிராஜனை பற்றி அவருடைய மனைவி முத்துலட்சுமி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். கலை உலகில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்தவரான சுருளி ராஜனின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பல பேர் வரவில்லையாம் .அதில் குறிப்பாக சிவாஜி வராதது தனக்கு வருத்தம் என அவருடைய மனைவி கூறி இருந்தார்.

suruli1

suruli1

அதுபோல் இவர் குடிப்பழக்கத்தால் தான் இறந்து போனார் என்றும் அவருடைய குடும்பம் இன்று எதுவுமே இல்லாமல் நிற்கதியாக இருக்கிறது என்றும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதை பார்த்து எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என அவருடைய மனைவி முத்துலட்சுமி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சினிமாவில் பானுப்பிரியா நடிக்காதது இதுக்குத்தானா? அவருக்கு சரியான ஜோடி அந்த ஹீரோவாம்..!

ஏனெனில் சுருளி ராஜனுக்கு அப்படி ஒரு பழக்கமே கிடையாதாம் அவர் குடித்துவிட்டு அப்போது இருந்த கண்ணதாசன் ஹோட்டலான கவிதா ஹோட்டலில் மது போதையில் கிடந்ததாக ஒருவர் பேட்டி கொடுத்ததை பார்த்து எனக்கு ஷாக் ஆகி விட்டதாகவும் என் வீட்டில் வந்து அவர் பார்த்தாரா? வந்து பார்க்கச் சொல்லுங்கள். நாங்கள் இப்பொழுது எப்படி இருக்கிறோம் என அவருடைய மனைவி பகிரங்கமாக பேட்டி கொடுத்திருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

google news
Continue Reading

More in Cinema History

To Top