Connect with us

latest news

ஃபீல் பண்ணும் கோபி… விஜயாவை அலறவிட்ட ஸ்ருதி… வாயை கொடுத்து சிக்கிய மீனா..

VijayTV:  பாக்கியலட்சுமி சீரியலில் எழில் எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். இதை நினைத்து பாக்கியா வருத்தப்பட்டு கொண்டிருக்கும்போது செல்வி இப்படி கஷ்டப்பட்டு எழில் தம்பி போகணுமா எனக் கேட்கிறார். அவன் இப்போ வந்தால் நல்லா இருக்காது. பின்னாடி அதுவே தப்பா போயிடும்.

அவன் சாதித்து வருவான். அதுதான் குடும்பத்தில் இருக்கிற எல்லாருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும் என்கிறார். வீட்டிற்கு வரும் கோபி ராதிகாவிடம் குடித்துவிட்டு மண்டபத்தில் நடந்த விஷயங்களை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். ராதிகா ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அனைவரும் வீட்டிற்கு வந்து விட இன்று நடந்ததை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: நீங்கலாம் மனுசன்தான!.. எங்கள பாத்தா எப்படி இருக்கு?!.. மாரி செல்வராஜை திட்டும் நடிகர்!…

சிறகடிக்க ஆசை தொடரில் சீதாவை வந்து மீனா பார்த்துவிட்டு செல்கிறார். ஹச் ஆர் கால் செய்து கிளைன்ட் விஷயத்தை வெளியில் சொன்னதற்காக உங்களுக்கு வேலை கிடையாது என்கிறார். பின்னர் சீதா கெஞ்சி கேட்டுக்கொண்டவுடன் பாதி சம்பளத்துடன் ஒத்துக் கொள்கிறார்.

 மீனாவுடன் பூ கட்டுபவர்கள் நைட் ஃபுல்லா பூ கட்ட ஒரு ஆர்டரை தருகின்றனர். ஆனால் மீனா முத்துவிற்கு சாப்பாடு போடணும் எனக் கூறி அதை மறுத்து விடுகிறார். ஆனால் முத்து வேலூர் வரை சவாரி ஒன்றுக்கு போவதாக கூறி நைட் வரமாட்டேன் என்கிறார். அதுபோல ரவியும் நள்ளிரவு வரை வேலை இருக்கும் என கூறி விடுகிறார்.

Pandian stores

இதனால் மீனா மற்றும் ஸ்ருதி இருவரும் பேய் படம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போ அங்கு வரும் விஜயா மீனாவை திட்டி விட்டு செல்கிறார். இதனால் அவரை பயமுறுத்த சுத்தி பிளான் செய்து சவுண்ட் போட அலறி கொண்டிருக்கிறார் விஜயா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் கதிர் ராஜியை திட்டிக் கொண்டிருக்கிறார். கோமதியிடம் நகையை எடுத்துட்டு வந்து நாளைக்கு கொடுத்துவிடு எனக் கூறி விடுகிறார்.

இதையும் படிங்க:  கோட் படத்துக்கு வந்த புது சிக்கல்… என்ன சொல்கிறார் திரையரங்கு உரிமையாளர்?

மீனா வேலைக்கு போனது ராஜிக்கு ரொம்ப முக்கியம் எனக் கூற, அவளுக்கும் கஷ்டம் இருந்துச்சி என்கிறார். இதனால், பேச்சுவாக்கில் தனக்கும் ராஜி வேலைக்கு போன விஷயம் தெரியும் என மீன ஒப்புக்கொள்கிறார். இதனால் செந்தில் கோபமாகி மீனாவை திட்டி விடுகிறார். பாண்டியன் ராஜியை கெடுப்பதே மீனாதான் எனக் கூறி அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறார். மீனா மற்றும் ராஜி மட்டும் அங்கு நின்று கொண்டிருப்பதுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top