Connect with us

latest news

சிங்கப்பெண்ணே முதல் மருமகள் வரை… சன் டிவி சீரியல்களில் என்ன நடக்க போகுது!..

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் டிஆர்பி தொடர்களின் இன்று என்ன நடக்கிறது என்பதன் ப்ரோமோ குறித்த தொகுப்புகள்.

சிங்க பெண்ணே: அன்பு மற்றும் ஆனந்தி வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். அன்பு இனிமே நான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். என்னுடைய முடிவு இதுதான் என்கிறார். மகேஷை வந்து பார்க்கும் ஆனந்தி நீங்க அன்பு கிட்ட பேசுங்க என்கிறார். 

இதையும் படிங்க: Jyothika: இப்படியெல்லாம் மாமனார் வீட்ல இருக்க முடியுமா ? மும்பையில் படு ஜாலியா சுத்தும் ஜோதிகா

ஆனால் மகேஷ் இன்னைக்கு நம்ம புது ஹாஸ்டலுக்கு போக போறோம். இனிமே நீ அன்பு வீட்டில் தங்க வேண்டாம். தங்கவும் கூடாது என கூறுகிறார். இதனால் ஆனந்தி கவலையாக இருக்கிறார்.

மருமகள்: பிரபு 10 லட்சம் பணத்திற்கு பயந்து தான் கல்யாணத்திலிருந்து ஓடிவிட்டதாக வேல்விழி கூறுகிறார். அப்பொழுது அங்கு வரும் பிரபு சித்தப்பா உனக்கு சின்ன ஆப்பா இல்லாமல் பெரிய ஆப்பா வைக்கவா என்கிறார். ஆதிரை அப்பாவை கொலை செய்ய வருபவர்கள். உன்னை கொன்னுவிட்டால் கல்யாணம் நின்று விடும் தானே என்கின்றனர்.

கயல்: எழிலிடம் கயல் என்னுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதோ பிரச்சினை என நினைக்கிறேன். அம்மாவிற்கு கால் செய்யவும் கடன்காரர் நான் மிரட்டியதில் அவர்கள் பயந்து கொண்டு வருவார்கள் என கூறுகிறார். பைனான்சியர் வரும்போது இவர்கள் இங்கே இருந்தால் நன்றாக இருக்காது என மூர்த்தியின் மனைவி நினைத்து கலங்குகிறார்.

இதையும் படிங்க: உலகநாயகனுக்கே சோதனையா…? ஏர்போர்ட்ல நாலு மணி நேரமாக கமலுக்குத் தொல்லை…!

சுந்தரி: கார்த்திக் அனுகுட்டியிடம் ராதா சிஸ்டர் இங்க தானே இருக்காங்க என கேட்கிறார். அனு கோபமாக பார்க்கிறார்.  சுந்தரி வெற்றியிடம் அவங்க உன்னை குத்தி இருந்தால் நான் என்ன செஞ்சிருப்பேன் என்கிறார். உன் கழுத்துல தாலி கட்டாம நான் சாகமாட்டேன் என வெற்றி கூறுகிறார். அனுவிடம் இத்தனை வருடம் ஆனது. இன்னுமா அவர் உங்க குரலை ஞாபகம் வைத்து இருப்பார் என கேட்கிறார். அனு அவனை லேசாக நினைத்து விடாதீங்க என்கிறார்.

மூன்று முடிச்சு: சுந்தரவல்லி கோபமாக பார்த்து நிற்க சூர்யா நந்தினி இடம் இந்த வீட்டிலிருக்கும் எல்லோரையும் உன்னிடம் வந்து சமையல் கத்துக்கொள்ள சொல்கிறேன் என்கிறார். இதனால் கோபமாகும் சுந்தரவல்லி கண்ணாடி முன்னாடி நின்று கண்ணு முன்னாடி உலாத்திக்கிட்டு இருக்கா. அவள உன்னால ஒன்னும் பண்ண முடியல என கத்துகிறார். சுந்தரவல்லிக்கு தோழி ஒருவர் வந்து நந்தினியை விரட்ட நிறைய ஐடியாக்கள் இருக்கு அதை நான் உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன் என்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top