எம்ஜிஆர் படத்துக்கே அது நடக்கல.. விஜயகாந்துக்கு நடந்துச்சு.. இது புது ரெக்கார்டால இருக்கு

Published on: March 18, 2025
---Advertisement---

ஒரு காலத்தில் 80களில் கமல் ரஜினி என இரு பெரும் ஆளுமைகள் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது சத்தமே இல்லாமல் உள்ளே நுழைந்தவர் விஜயகாந்த். தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு மெல்ல மெல்ல தன்னுடைய வளையத்தை பெருக்கிக் கொண்டே போனார் விஜயகாந்த். அது ஒரு கட்டத்தில் ரஜினி கமலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்தது .

சிவாஜி காலத்தில் மூவேந்தர்களாக திகழ்ந்தவர்கள் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன். அதைப்போல 80 கள் காலகட்டத்தில் மூவேந்தர்களாக திகழ்ந்தனர் ரஜினி கமல் விஜயகாந்த். அப்பொழுதெல்லாம் ஒரு சென்டிமென்ட் இருக்கும்.. ரஜினி கமல் பிரபு கார்த்திக் இவர்களின் நூறாவது படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைந்ததில்லை .அமையாது என்ற ஒரு சென்டிமென்டே இருக்கும்.

ஆனால் அந்த செண்டிமெண்ட்டை தகர்த்தெறிந்தவர் விஜயகாந்த். இவருடைய நூறாவது படம் கேப்டன் பிரபாகரன் யாரும் எதிர்பாராத பெரிய அளவு பிளாக்பஸ்டர் வெற்றியை கண்ட படமாக மாறியது. அதுவரை எந்த நடிகருக்கும் 100வது படம் வெற்றி படமாக அமைந்ததே இல்லை. அந்த வகையிலும் விஜயகாந்த் ஒரு பெரும் சாதனை புரிந்திருக்கிறார். இவரை கருப்பு எம்ஜிஆர் என்றே ஒரு காலத்தில் அழைத்து வந்தனர்.

பிறகு வேண்டாம் என விஜயகாந்தை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மக்களுக்காக என்னெல்லாம் செய்ய வேண்டும் என நினைத்தாரோ அதை விஜயகாந்த் செய்து வந்தார். மக்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டவராக இருந்தார். அதனாலேயே எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு விஜயகாந்தை ரசிகர்கள் பேசத் தொடங்கினர்.

இந்த நிலையில் ரெப்பல் ரவி விஜயகாந்த் பற்றி ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்து இருக்கிறார். சென்னை பட் ரோட்டில் அமைந்திருக்கும் ஒரு தியேட்டரில் விஜயகாந்தின் வசந்த ராகம் திரைப்படம் இரண்டு வாரங்கள் தொடர்ந்து நான்கு ஷோக்களாக ஓடியதாம். இது எம்ஜிஆர் படத்துக்கே நடந்ததில்லை. ஆனால் விஜயகாந்தின் அந்த வசந்த ராகம் திரைப்படம் தான் நான்கு ஷோக்களாக தொடர்ந்து இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது என ரெப்பல் ரவி கூறி இருக்கிறார். அதுவும் இது ஒரு பெரிய ரெக்கார்டு என்றும் கூறியிருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment