Connect with us

latest news

குபேரா படத்தின் மைனஸ்கள் என்ன?!. இது மட்டும் செஞ்சிருந்தா!.. லிஸ்ட் போடும் பிரபலம்!

குபேரா படத்தை முதலில் மூன்றரை மணி நேரமாக எடுத்து வைத்து இருந்தாங்களாம். அப்புறம் அதை ட்ரிம் பண்ணி 3 மணி நேரத்துக்குக் குறைத்துள்ளார்கள். இப்போ படம் எப்படி இருக்குன்னு அதைப் பார்த்த பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களைச் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

தனுஷ் தான் இந்தப் படத்தோட கதையை ஒற்றை ஆளா சுமக்கிறார். ஒரே நேர்க்கோட்டுல போற பிச்சைக்காரன் கதை தான் குபேரா. அப்படின்னா ஒரு கிளைக்கதையைச் சொல்லணும்.

ஆனா அது எதையுமே சொல்லாம பிச்சைக்காரன், கோடீஸ்வரன், சிபிஐ அதிகாரின்னு மாத்தி மாத்திப் போகுது. இதுக்கு இடையில ராஷ்மிகா மந்தனா. அந்தக் கேரக்டர் எல்லாம் ஒட்டுதலே இல்ல. வலுவான காரணம் சொல்லணும். பிச்சைக்காரனுக்கு வலி ஏற்படுத்துற மாதிரி சீன் வருதுன்னா ஆடியன்ஸ் அலறணும்.

ஆனா இதெல்லாம் வரப்போகுதுன்னு தெரியுது. பல சீன்கள் அப்படியே ஓடிக்கிட்டே இருக்கு. ஒரு கட்டத்துக்குப் பிறகு முடிச்சிடுங்க. வேண்டாம். விட்டுருங்கன்னு சொல்ல வைக்கிறாங்க.

ஆடியன்ஸ்சும் பார்த்துக்கிட்டே இருக்குறோம். எதுக்குன்னு ஒரு கேள்வி எழுது. 3 மணி நேரம் 2 நிமிஷம் ஓடுற இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்தக் கால நேர விரயம் ஒரு கட்டத்துல சோர்வைக் கொடுக்குது. ப்ளஸே இல்லையான்னு கேட்கலாம். முதல் பாதியில் அவ்வளவு அருமையா கதையைக் கொண்டு போனாங்க.

அடுத்த பாதியில் நாலைஞ்சு சீன் திருப்புமுனையா வச்சு ஒரு கிரிஸ்பா டக்குன்னு அந்தக் கதையை எண்டு கார்டு போட்டு முடிச்சிருக்கணும். எதுக்கு இந்தப் படத்தை ஆடியன்ஸ் ஃபீல் பண்ணனும்னு வளர்த்துருக்காற்களான்னு தெரியல. இல்ல நடிப்பு அரக்கன் தனுஷ் கிடைச்சிட்டாரு.

இவருக்கிட்ட இருந்து நடிப்பை உறிஞ்சி எடுக்கணும்னு சேகர் கம்முலா நினைச்சாரான்னு தெரியல. அவர் பிரபலமான தெலுங்கு டைரக்டர். இதுவே ஒரு புது டைரக்டர் இவ்ளோ பெரிய கதையைச் சொன்னா மாஸ் ஹீரோக்கள் ஒத்துக்குவாங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் செய்யாறு பாலு.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top