Connect with us

latest news

குபேரான்னு சொல்லிட்டு பிச்சைக்காரனா காட்டினா!.. தலை வலிக்குது!.. ஃபேன்ஸ் சொல்வது என்ன?!…

Kubera Review: தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் குபேரா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. காலை முதலே இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் தேசிய விருது வாங்குவார் என்றெல்லாம் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.

இந்நிலையில் தியேட்டர்களில் படம் பார்த்த ரசிகர்கள் சிலர் படத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். தனுஷுக்கு மாஸ் காட்சிகளே இல்லை. சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் போல தனுஷுக்கு இந்த படம் அமைந்துவிட்டது. தனுஷ் நன்றாக நடித்திருந்தாலும் படம் நன்றாக இல்லை. தெலுங்கு படம் மாதிரி இருக்கு. தெலுங்கு டைரக்டர்னு தெரிஞ்சிந்தா படம் பார்க்க வந்திருக்க மாட்டோம்.

இந்த கதையை தனுஷ்கிட்ட கொடுத்திருந்தாலே நல்லா டைரக்ட் பண்ணியிருப்பார். குபேரான்னு பேர் வச்சிட்டு எங்க தலைவரை பிச்சைக்காரனா காட்டியிருக்கிறது எங்களுக்கு புடிக்கல. கதை சரியில்லை. திரைக்கதை எங்களுக்கு பிடிக்கவில்லை’ என ஒருவர் பொங்கியிருக்கிறார்.

இன்னொருவரோ ‘படம் நன்றாக இருக்கிறது. இயக்குனர் இந்த படத்தில் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார். முதல் பாதி நன்றாக இருந்தாலும் சில இடங்களில் லேக் இருக்கிறது. இரண்டாம் பாதியிலும் லேக் இருக்கிறது. ஓவரால் படத்தில் அரை மணி நேரம் குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

படத்தின் துவக்கத்தில் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு துவங்கியிருப்பதே பெரிய மைனஸ். அதை சொல்லாமல் இருந்திருந்தால் கூட ரசிகர்கள் சஸ்பென்ஸுடன் படம் பார்த்திருப்பார்கள். படத்தில் முக்கிய பிரச்சனையை சொல்கிறார்கள். ஆனால், அதற்கான தீர்வுகளை சொல்லவில்லை. கிளைமேக்ஸ் திடீரென முடிந்தது போல் இருக்கிறது. அது பெரிய மைனஸ். தனுஷ், நாகார்ஜுனா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் பிரம்மாண்டமாக இருக்கிறது. நிறைய செலவு செய்திருக்கிறார்கள். ஒருமுறை பார்க்கலாம்’ என சொல்லியிருக்கிறார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top