Gossip: தமிழில் கொலைவெறி மியூசிக் டைரக்டர் தன்னுடைய கேரியரில் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஐபிஎல்லில் முக்கிய பிரபலத்துடன் காதலில் சிக்கி இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.
சுள்ளான் நடிகர் அறிமுகப்படுத்தி மியூசிக் டைரக்டர் தான் கொலைவெறி பிரபலம். முதல் பாடலே உலகளாவிய ஹிட். கோலிவுட்டில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எல்லாமே இவர் கைக்கு வந்தனர்.
ஒவ்வொரு முன்னணி ஹீரோயின் சூப்பர் படங்களுக்கும் இந்த மியூசிக் டைரக்டர் கையில் குவிந்தது. அதிலும் அந்த டாப் நடிகரின் சிறை காவலர் படத்துக்கு இவர் போட்ட மியூசிக் பெரிய அளவில் வைரலாக்கியது.
தொடர்ந்து ஒன்னு, இரண்டு, மூணு என எல்லா ஸ்டார் படங்களுக்கும் இவர் இசையமைப்பில் இறங்கி எல்லா பாடல்களையுமே வெற்றி லிஸ்ட்டில் இணைத்தார். தற்போது சூப்பர் லிஸ்ட்டில் இருக்கும் கொலவெறி மியூசிக் டைரக்டர் ஒரு பக்கம் கேரியரின் உச்சத்தில் இருக்கிறார்.
இன்னொரு பக்கமோ ஐபிஎல்லின் அக்கட தேச சூரிய உதய அணியின் காவியமான பிரபலத்துடன் காதலில் விழுந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காவிய பிரபலம் தமிழ் சினிமாவின் சூரிய நிறுவனத்தை சேர்ந்த பெண் என்பதால் இந்த காதல் விவகாரம் வைரலாகி வருகிறது.
மேலும் கோலிவுட்டின் பெரிய ஸ்டாரின் மனைவியின் நெருங்கிய உறவினர் தான் கொலவெறி மியூசிக் டைரக்டர். இதனால் சூரிய குடும்பமும் டாப் ஸ்டார் குடும்பமும் தற்போது கல்யாண பேச்சை பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com





