திரையுலகில் விஜயகாந்தால் வளர்ந்தவர்கள் பலர். அதில் நடிகர் விஜய்யும் ஒருவர். விஜயின்ன் படங்கள் சரியாக போகாத போது அவரின் அப்பா எஸ்.ஏ.சி கேட்டுக்கொண்டதால் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜயின் அண்ணனாக நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். இந்த படம்தான் விஜயை பி மற்றும் சி சென்டர்களில் கொண்டு சேர்த்தது.

அதன்பின் பூவே உனக்காக உள்ளிட்ட சில படங்கள் விஜயின் மார்க்கெட்டை உயர்த்தியது. ஒருகட்டத்தில் விஜயின் பெரிய நடிகராக மாறினார். ஆனால் விஜயின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவுக்கு நடிக்க வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் அவரை தன்னுடைய படத்தில் விஜய் நடிக்க வைக்கவில்லை.
விஜயகாந்த் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் இதை சமூக ஊடகங்களில் பலமுறை கூறியபோதும் விஜய் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் அரசியல் மேடைகளில் பேசும்போது அவர் விஜயகாந்த் பற்றி பேசுகிறார். இந்நிலையில்தன் 80ளில் விஜயகாந்துடன் சில படங்களில் நடித்த நடிகை அம்பிகா விஜயை திட்டி பேட்டி கொடுத்திருக்கிறார்.

விஜயகாந்த் இறந்ததற்கு பின் அவரின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் விஜயகாந்த் விஜய்க்கு சினிமாவில் எவ்வளவோ உதவி பண்ணினார். வார்த்தைக்கு வார்த்தை விஜயகாந்த் உங்களோடு அண்ணன் பேசுறீங்க.. அவர் பையன் சண்முக பாண்டியனிடம் ‘என் படத்துல நீ ஒரு கேரக்டர் பண்ணு.. இல்லன்னா உன்னோட படத்துல நான் ஒரு பைட்டு ஒரு பாட்டுல நடிக்கிறேன்.. அண்ணன் விஜயகாந்துக்காக இதை செய்கிறேன் என விஜய் சொல்லவில்லை..
இப்ப மட்டும் என்ன திடீர்னு பாசம் பொத்துக்கிட்டு வருது?.. அப்டினா விஜயும் மத்த அரசியல்வாதிங்க மாதிரி வேஷம்தான் போடுறாரு.. காரியம் ஆகணும்னா மட்டும் விஜயகாந்த் தேவைப்படுகிறார்.. அதுவும் இப்பதான் தேவைப்படுகிறார்’ என பொங்கியிருக்கிறார் அம்பிகா.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com





