
Cinema News
விஜய் வெளிய வா வானு கூவிட்டு இருந்தீங்க.. இப்ப புரியுதா?!.. பொங்கும் ரசிகர்கள்….
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் விஜய். திரைத்துறையில் படிப்படியாக தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விஜய் தற்போது அரசியல் களம் கண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்து எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி தன்னுடைய கட்சித் தலைவர்கள் யார் யார்? தன்னுடைய அரசியல் எதிரிகள் யார் என்று சூசகமாக சொன்னார். அப்பொழுது விஜயின் பேச்சு பலரின் கவனத்தை ஈர்த்தாலும் இன்னும் விஜய் சுற்றி வளைத்து தான் பேசுகிறாரே தவிர வெளிப்படையாய் பேசுவதற்கு பயப்படுகிறாரோ? என்று பல விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இதனை அடுத்து விஜய் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதில் தனது அனல் பறக்கும் பேச்சால் மதுரையை அலர விட்டார். இம்முறை தன்னுடைய அரசியல் எதிரிகள் யார் என்று அவர்களின் பெயரை சொல்லி ஆக்ரோஷமான பேச்சை வெளிப்படுத்தினார். இது அரசியல் எதிரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது. விஜய்க்கு சேர்ந்திருக்கும் இந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வருகிறது.

விஜய் இன்னும் ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்து வருகிறார். மக்களை சந்திப்பதற்கு அவர் பயப்படுகிறார். இப்படி எல்லாம் அரசியல் செய்ய வேண்டுமா? என்று விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்ததுண்டு. அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாகதான் அமைந்தது விஜயின் திருச்சி தேர்தல் பரப்புரை. விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் இன்று ஆரம்பித்திருக்கிறார்.
திருச்சி மரக்கடை பகுதியில் பேசுவதற்கு காலை 10:30 மணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் திருச்சி ஏர்போட்டில் இருந்து மரக்கடை பகுதிக்கு வர சுமார் ஆறு மணி நேரம் ஆகியிருக்கிறது. மூன்று மணி அளவில் தான் மரக்கடை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளார். வழி நெடுக எங்கும் கட்டுப்பட காட்டாற்று வெள்ளம் போல மக்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு நடுவில் எறும்பு போல் ஊர்ந்து ஊர்ந்து அந்த பகுதிக்கு வந்து சேர்த்தார்.
இதனால் பல இடங்களில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. அன்றாட வாழ்க்கையில் பயணிக்கும் மக்கள் பெரிதும் அவஸ்தை பட்டார்கள். போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்தது, அவசர வேலை, அவசர பயணம் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். விஜய் ஒரு முறை இப்படி வெளியில் வந்ததற்கு இவ்வளவு சங்கடங்களை சாதாரண மக்கள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் விஜய் இறங்கினால் எப்படி இருக்கும் என்று விஜயை விமர்சிப்பவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
விஜய் பார்க்க வந்த கூட்டம் 300 ரூபாய்க்கு வாட்டர்ருக்கும், பிரியாணிக்கும் சேர்ந்த கூட்டம் அல்ல உண்மையான மக்கள் கூட்டம். திருச்சியில் இப்படி இருக்கிறது என்றால் சென்னையில் விஜய் வெளியே வந்தால் சென்னை மாநகரம் முழுவதும் ஸ்தம்பித்து விடும். இந்த நிகழ்வு விஜய் கடுமையாக விமர்சிப்பருவனுக்கு தக்க பதிலடியாக இருந்திருக்கும். நீங்கதானய்யா வா வா வெளிய வா கூவிகிட்டு இருந்தீங்க, இப்போ தெரிகிறதா தலைவர் எதுக்கு வர்றதில்லை என்று விஜய் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.