Connect with us

என்னால்தான் அரசு பேருந்திலிருந்து அந்த வார்த்தையையே தூக்கிட்டாங்க- ஏ.வெங்கடேஷ் ருசிகர தகவல்

latest news

என்னால்தான் அரசு பேருந்திலிருந்து அந்த வார்த்தையையே தூக்கிட்டாங்க- ஏ.வெங்கடேஷ் ருசிகர தகவல்

90களில் முக்கிய இயக்குஅன்ர்களில் ஏ. வெங்கடேஷுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. தமிழ் திரையுலகில் விறுவிறுப்பான திரைக்கதைக்கும், குறுகிய காலத்தில் படத்தை முடிப்பதற்கும் பெயர்பெற்றவர் இவர். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார் நடித்த மகாபிரபு படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து விஜய் நடிப்பில் செல்வா, நிலாவே வா, பகவதி , அர்ஜூன் நடிப்பில் வாத்தியார், துரை, குத்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அங்காடி தெரு முலம் நடிகராகவும் அறிமுகம் ஆனார் வெங்கடேஷ்.

இந்த நிலையில் சமீபத்தில் வர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், ஒரு நாள் அரசு பேருந்தில் இது உங்கள் சொத்து, சேதப்படுத்த வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ட ஒருவன் உண்மையாகவே இது என்னுடைய சொத்து என்று கூறினால் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். இதை காமெடியாக செய்தால் என்ப்படி இருக்கும் என்று எண்ணிதான் பகவதி படத்தில் அந்த காட்சியை வைத்தேன். அது நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காமெடி வைரலானபின்பு தான் பேருந்திலிருந்து அந்த வாக்கியத்தை நீக்கினார்கள் என்று கூறினார்.

To Top