கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு பெரிய ஹைப் உருவானது.. விஜய் ரசிகர்கள் எல்லோருமே லோகேஷ் கனராஜின் ரசிகர்களாக மாறினார்கள்.. ஒருபக்கம் லோகேஷின் திரைப்படங்களை எல்சியூ என அவர்கள் கொண்டாடினார்கள்.
இப்படி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ, கூலி ஆகிய இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது.. அந்த இரண்டு படங்களிலுமே தான் செய்த தவறுகளை லோகேஷ் கனகராஜ் ஒப்புக்கொண்டார்..
இந்நிலையில்,இன்று செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் கனகலந்துகொண்டார். அப்போது அவரிடம் ‘ஜனநாயகன் படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்களா?/. அந்த படம் சென்சாரில் சிக்கியிருக்கிறது.. உங்கள் கருத்து என்ன?.. கூலி படத்திருக்கும் ஏ சான்றிதழ் கொடுத்தார்கள்?’ என செய்தார்கள் கேட்டதற்கு ‘ரஜினி சார் படத்திற்கு எப்படி சான்றிதழ் வாங்கலாம் என்று கேட்டார்கள்.. படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் சில இடங்களில் மியூட் சொல்லிவிட்டு 35 கட் சொன்னார்கள்..
எனவே மறுத்தணிக்கைக்கு சென்றோம்.. யுஏ சான்றிதழ வேண்டுமெனில் 35 காட்சிகளை வெட்ட சொன்னார்கள்.. 35 காட்சிகளை வெட்டிவிட்டால் படத்தில் ஒன்றுமே இருக்காது.. அதனால் ஏ சான்றிதழே வாங்கி விட்டோம்.. அதற்கான சுதந்திரத்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், ரஜினி சாரும் எனக்கு கொடுத்தார்கள்.. மற்றபடி A சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை’ என கூறினர்.
மேலும், ‘ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை பற்றி இயக்குனர் வினோத்தான் பேச வேண்டும்.. நான் பேச முடியாது.. அந்த படத்தில் ஒரு கேமியோ படத்தில் நடித்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.





