ilaiyaraja, kannadasan
ilaiyaraja, kannadasan

சிக்கலான மெட்டைப் போட்டு கண்ணதாசனுக்கு டஃப் கொடுக்க முயன்ற இளையராஜா… ஆனால் கவியரசர் சும்மா விடுவாரா. வரிகளில் ஜாலம் காட்டி விட்டார். அது என்ன பாடல்னு பாருங்க…

இளையராஜா இருந்த காலகட்டத்தில் இசையில் நிறைய மாற்றங்களை உண்டாக்கினார். 3 சரணத்தை 2 சரணமாக்கினார். இடையிசையை நிறைய வைத்தார். தேவை ஏற்படும்போது சரணத்தோட அளவைக் குறைத்து விட்டார். அதனால்தான் பலரும் இசைஞானியின் இசைக்கு வரிகள் தேவையில்லை.

இசையே நிறைய உணர்வுகளைக் கொட்டிரும்னு சொல்வாங்க. அப்படி ஒரு வித்தியாசமான பாடல் தான் இது. பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இருந்து ஒரு பாடல். சிவாஜி, ஸ்ரீதேவி நடித்துள்ளனர். கண்ணதாசன் எழுதியது. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் என்ற பாடல் தான் அது.

மலைப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கையில் அப்படியே இந்தப் பாடல் பொருந்திப் போகும். சிவாஜி பயங்கர கோபக்காரர். அப்போ அவருக்கு ஒரு காதல் வரும். இதனால தனக்கு ஒரு வாழ்க்கை இருக்குன்னு எண்ணுகிறார். இந்தப் பாடல் சுகப்பிரியா ராகத்தைச் சேர்ந்தது. பல்லவியிலேயே மெட்டில் அவ்வளவு அழகை சேர்த்து இருப்பார் இளையராஜா. அதே போல மொத்த சரணத்தையும் ரத்தினச் சுருக்கமாக மெட்டில் கொண்டு வந்துள்ளார் இசைஞானி. பாடலை ரசித்துக் கேட்கும்போது இது தெரியும்.

நீங்க மட்டும் தான் மெட்டுல வித்தியாசம் காட்டுவீங்களா? நானும் வரிகளில் காட்டுறேன்னு கண்ணதாசன் இப்படி சரணம் போட்டு இருப்பார்.

”உள்ளத்தின் தேவை. உள்ளே என் ஜீவன். நீ நீ நீ…”ன்னு எழுதியிருப்பார். அடுத்து எவ்வளவு குறுகலான மெட்டுக்குள்ளும் கதையைச் சொல்ல முடியுமான்னா கண்ணதாசன் சொல்லி இருப்பார். ”கல்லானவன் பூ ஆகிறேன் உன்னை எண்ணி இருக்க…” இதுதான் அந்த வரி. அடுத்து காதலி கேட்கிறாள். ”பூ ஆனதும் பொன் மஞ்சனம் என்றோ எங்கோ ராஜா?” எனக் கேட்கிறாள். ”கல்யாணம் எப்போ? ஆகுமா, ஆகாதா…”ன்னு கேட்கிறாள். ”எதற்காக வாழ்ந்தேன். உனக்காக வாழ்வேன். நான் நீ நாம்…” என்று முத்தாய்ப்பாக முடித்து இருப்பார் கண்ணதாசன்.