நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், அவரின் ஜனநாயன் திரைப்படம் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறது. படத்தின் ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு ‘படத்தை படம் பார்த்த அதிகாரி ஒருவர் புகார் கூறியிருக்கிறார். எனவே, மறுதணிக்கை செய்ய வேண்டும். அதற்கு மூன்று வாரம் தேவைப்படும்’ என தணிக்கைவாரியம் சொன்னது. இதையடுத்து இதை எதிர்த்து தயாரிப்பாளர் நீதிமன்றத்தை வழக்கு தொடர்ந்தார். தற்போது வழக்கு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் படம் இப்போது வரை ரிலீஸாகவில்லை.
இதை புரிந்துகொண்ட தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற்றார்.. அதோடு மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்திருக்கிறார். அதே நேரம் படம் எப்போது தணிக்கை அதிகாரிகளால் மறுதணிக்கை செய்யப்படும் என்பது தெரியாமல் இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் படம் வெளியாகவில்லை என்றால் கண்டிப்பாக இந்த படம் மே மாதமே ரிலீஸாக வாய்ப்புண்டு. ஏனெனில் மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.. ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது.. எனவே இந்த இரண்டு மாதங்களிலும் படத்தை வெளியிட்டால் கல்லா கட்ட முடியாது..
ஒருபக்கம் ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் தொடர்பான காட்சிகளை மறுதணிக்கையின் போது தூக்கிவிட்டால்அந்த காட்சிகளை தவெக தனது விளம்பரங்களாக பயன்படுத்தும் திட்டமும் இருக்கிறதாம். அதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் எண்ணம் இருக்கிறதாம்.
ஏனெனில் தேர்தலுக்கு பின்னர் அந்த காட்சிகள் ட்ரோல் மெட்டீரியலாக மாற வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு என்கிறார்கள்..
