vikram
vikram

தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய உழைப்பையும் திறமையும் மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்த வெகு சிலரில் விக்ரமும் ஒருவர். துவக்கத்தில் விக்ரம் நடித்த சில படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபோதுதான் பாலா இயக்குனராக அறிமுகமான சேது பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது..

சேது பட வாய்ப்பு கூட விக்ரமுக்கு நேரடியாக கிடைக்கவில்லை.. விக்னேஷ், முரளி என பலரிடமும் கதை சொல்லி அது நடக்காமல் கடைசியாக விக்ரம் வந்தார். படத்தின் கதையை புரிந்து கொண்ட விக்ரம் இந்த படம் தன்னுடைய வாழ்க்கையை மாற்றும் என நம்பினார்.. அந்த படத்தின் இரண்டாம் பாதியில் மனநலம் பாதிக்கப்பட்டவராக அவர் கொடுத்த நடிப்பும், உடலை வருத்தி அவர் கொடுத்த உழைப்பும் ரசிகர்களை உருக்கியது.. அதனால்தான் அந்த படம் வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் பாலா ‘சேது படம் பண்ணும் போது படத்தோட கிளைமாக்ஸ் காட்சியில் ஒல்லியா தெரியுனும்னு விக்ரம் 20 நாள் டயட் இருந்தார்.. வெறும் நீராகாரம் மட்டும்தான் சாப்பிட்டார்.. ஒரு சித்த வைத்திய சாலை காட்சி ஒன்று வரும்.. அவரை படுக்க வைத்து வைத்தியம் பண்ற மாதிரி ஒரு சீன்.. சாப்பிடாம இருந்ததால காது அடைச்சுக்கும். பேசினாலும் கேட்காது.. நான் தட்டி தட்டி ‘கேக்குதா? கேக்குதா? சொல்றது புரியுதா’ என்று கேட்டு கேட்டு நடிக்க வைச்சேன்.. அப்படி கஷ்டப்பட்டுதான் அந்த படத்தில் விக்ரம் நடிச்சார்’ என சொல்லியிருக்கிறார்.

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.