ஏ.ஆர்.ரகுமானை திருமணம் செய்ய ஆசைபட்ட பிரபல தமிழ் நடிகை

90-களில் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தவர் மோகினி.

1991-ல் வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது வசீகரமான கண்கள் மற்றும் நடிப்பால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முதல் படமே ஹிட் ஆனதால் மள மளவென பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன. நாடோடி பாட்டுக்காரன், நான் பேச நினைப்பதெல்லாம், தாயகம் என பல படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளத் திரையுலகில் இவருக்கு அதிக வரவேற்பு இருந்தது. திரையுலகில் பிஸியாக இருந்தபோதே, 1999-ல் பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அதன் பிறகு நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார். தனது வாழ்க்கையின் கடினமான சூழலில் ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப்பட்ட அவர், கத்தோலிக்க நற்செய்தியாளராக மாறினார். பல யூடியூப் பேட்டிகளில் தனது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சவால்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை மோகினி ஏ.ஆர் ரகுமான் குறித்து சொன்ன தகவல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் கூறியபோது, நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகை. வெறித்தனமான அன்பு என்றே சொல்லலாம். அவர் இஸ்லாமுக்கு மாறியது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன். மதம் மாறாமல் இருந்திருந்தால் வீட்டில் எனக்கு ரகுமானை பிடித்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொவதற்கு வசதியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.