aazhi movie review

கடலோர மக்களின் வாழ்வியலோடு, நிழலுலகக் குற்றங்களையும் கலந்து ஒரு ‘த்ரில்லர்’ கதையைத் தர முயன்றிருக்கிறது ஆழி. தந்தை-மகள் பாசம் மற்றும் காதல் என்று ஒரு நல்ல கதை கையில் இருந்தும், அது திரையில் எப்படி எடுபட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

கதைச் சுருக்கம்

மீன்பிடி படகு மெக்கானிக்காக வலம் வரும் சரத்குமாருக்கு ஒரு இருண்ட பக்கமும் உண்டு. ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் அவர், தன் ஒரே மகள் தேவிகா சதீஷின் காதலுக்குத் தடையாக நிற்கிறார். காதலன் இந்திரஜித் ஜெகஜித்தை ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று தீர்த்துக்கட்ட நினைக்கும் சரத்குமாரிடமிருந்து, அந்தப் பயங்கரமான சூழலில் இருந்து காதலன் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் விறுவிறுப்பான மீதிக்கதை.

சரத்குமார் ஹீரோ மற்றும் வில்லன் என இரு பரிமாணங்களை பிரதிபலிக்கிறார். ஆனால் ஏற்கெனவே இவரை இந்த வேடங்களில் பார்த்ததால் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இளம் நாயகன வரும் இந்திரஜித் ஜெகஜித் நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தினால் நல்லது. இளம் நாயகியாக நடித்துள்ள தேவிகா சதீஷ் அழகாக உள்ளார். ஓரளவிற்கு வேடத்தை புரிந்து நடித்துள்ளார்.

ரசூல்பூக்குட்டியின் ஒலிப்பதிவு சொல்லிகொள்ளும்படி இல்லை. இசை ஜாஸி கிப்ட். பாடல்கள் சொல்லிகொள்ளும்படி இல்லை. முதல்பாதியைவிட இரண்டாம் பாதியால்தான் படம் ஓரளவிற்கு தப்பி உள்ளது.

மொத்தத்தில் ஆழி திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர்.