விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் நடிகை தாமரை. பிக்பாஸில் சாதாரண மக்களிடம் இருந்து வந்து சில போட்டியாளர்களை உள்ளே இறக்குவார்கள்.
அந்த வகையில் முதல் சீசனில் வந்த ஜூலி காயத்ரியுடன் சேர்ந்து பேசியது வைரலான நிலையில் அவருக்கு நெகட்டிவ் விமர்சனமே குவிந்தது. தனலட்சுமிக்கும் இதே நிலை தான் எலிமினேட் ஆக வேண்டும் என கோரிக்கை வரை எழுந்தது.
இதில் விதி விலக்கு என்னவோ தாமரை தான். உள்ளே வந்தது முதல் நல்ல கண்டெண்ட் கொடுத்து ரசிகர்களை குவித்தார். ஃபைனல் வரை செல்வார் என நம்பப்பட்டது. இருந்தும் அவர் டாப் 5 கூட செல்லாமல் வெளியேறினார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. சின்னத்திரையில் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபகாலமாக தொடர்ந்து வீடியோ மூலம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகிறது. சின்ன மருமகள் சீரியல் ஸ்வேதா கணவர் ஆதி நல்லது செய்வது போல இருக்கிறது.
அவர் என் வீட்டில் தங்கி இருந்தார். அவர் அவசரமாக என்னிடம் காசு கேட்டார். அதற்கு என்னுடைய 3 பவுன் நகையை அவர் ஏரியாவில் அடகு வைத்தோம். அங்கு அதிகமாக இருக்கும் எனக் கூறியதால் அவர் பெயரில் அவர் ஏரியாவில் வைத்தோம்.
ஆனால் அதை மூணே நாளில் திருப்பி விற்றுவிட்டார். இப்போ என்ன செய்வது என்றே தெரியவில்லை. நகை வாங்கிய ரசீது கூட என்னிடம் இருக்கிறது. தற்போது நான் என்ன செய்ய போகிறேன் என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.





