அந்த படத்துக்கு முன்னாடி என் படம் வந்தே ஆகணும்.! தயாரிப்பு தரப்புக்கு கட்டளையிட்ட தளபதி.!

Published on: January 19, 2022
---Advertisement---

விஜய் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் முழுவதும் முடிந்து போஸ்ட் ப்ரொடெக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பலர் நடித்து உள்ளனர்.

இப்படம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாவதாக கூறப்பட்டது. படக்குழுவும் அதற்கேற்றாற் போல ரிலீஸ் செய்த போஸ்டர்களில் ஏப்ரல் 2022 என பதிவிட்டு வருகின்றனர். விஜயும் அந்த தேதியில் உறுதியாக இருக்கிறாராம்.

ஆனால், இடையில் ஒரு சிக்கல் இருக்கிறதாம். அதாவது, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக RRR, வலிமை என பெரிய படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துவிட்டன. அதனால், எதற்கும் துணிந்தவனும் தள்ளிப்போக அதிக வாய்ப்புள்ளதாம்.

அதனால் படக்குழு, எதற்கும் துணிந்தவனை மார்ச் இறுதி அல்லது ஏப்ரலில் பிளான் செய்கிறதாம். அதனால் பீஸ்ட் தள்ளிப்போக கூட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

ஆனால், விஜய்க்கு இதில் உடன்பாடில்லையாம். காரணம் ஏப்ரல் 14 விஜய்க்கு ராசியான நாள் அதில் வெளியான பத்ரி, கில்லி, சச்சின், தெறி என அனைத்தும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள். அதனால், அந்த தேதியை விட விஜய்க்கு மனமில்லை. அதனால், எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தள்ளி சென்றால் அதனை பீஸ்ட்க்கு பிறகு கூட ரிலீஸ் செய்துகொள்ளுங்கள் எனும் முடிவில் விஜய் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment