ஏ.ஆர்.ரகுமான் வச்ச குறி இளையராஜாவுக்கு இல்லையாம்!... அப்போ அது யாருக்குத் தெரியுமா?

இன்று சமூகவலைத்தளங்களைத் திறந்தாலே இளையராஜா, வைரமுத்து, கங்கை அமரன் என்று சர்ச்சைகள் வரிசைகட்டி வந்து நிற்கின்றன. இசையா, மொழியா என்று பலரும் தங்கள் கருத்துகளை பட்டிமன்ற நடுவர் போல இருந்து முன்வைத்து வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தத் துறையைச் சாராதவர்களே பல்வேறு விஷயங்களையும் தங்களுக்குத் தெரிந்த வரையில் அலசுகிறார்கள். அப்படி என்றால் அதில் எப்படி உண்மைத்தன்மை தெரியும்?

அந்தவகையில் இளையராஜா, வைரமுத்து போல தற்போது ஏ.ஆர்.ரகுமானும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது என்ன என்பதை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... இந்த படத்துக்கு இவர் செட்டாக மாட்டார்!… ரஜினிகாந்தை நினைத்து தயங்கிய விசு… நம்பிக்கை கொடுத்த கே.பாலசந்தர்…

ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் தளத்தில் நாலடியாரின் பாடலைப் போட்டாராம். அதாவது பல கற்றோம் யாமென்று... என்று தொடங்கும் பாடல். எனக்கு எல்லாம் தெரியும் என்று பீற்றிக்கொள்ளாதே, எங்களுக்கும் தெரியும் என்பது போன்ற அர்த்தம் கொண்ட வரிகள் அது. இதைப் பார்க்கும்போது அவர் இளையராஜாவை மறைமுகமாகத் தாக்குகிறாரோ என்று சலசலப்பு எழுகிறது. இதுவரை ரகுமான் யாரைப் பற்றியும் புறங்கூறியது இல்லை. அவருக்கும் எல்லா மனிதர்களைப் போலவே மன அழுத்தம் இருக்கும்.

இதையும் படிங்க... விஜய்க்கு சொன்ன கதையில அஜீத்தை நடிக்க வச்சிட்டேன்… சுந்தர்.சி. போட்டு உடைத்த ரகசியம்!

ரகுமான் இளையராஜாவைப் பற்றி இதுவரை ஒரு சொல் கூட தவறாக சொன்னதில்லை. இளையராஜாவைத் தனது குருநாதராகத் தான் வைத்துள்ளார். இளையராஜாவும் ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர் தன்னோட குருநாதர். பல இடங்களில் தனக்கு சாப்பாடு கொடுத்தவர் என பல மேடைகளில் சொன்னாராம். அதே போல கவிப்பேரரசு வைரமுத்துவைப் பற்றியும் இவர் சொல்லவில்லை. அப்படின்னா எதனால் இப்படி பதிவு போட்டுள்ளார் என்று பார்த்தால் ஒரு விஷயம் எண்ணத் தோன்றுகிறது.

அதாவது இவரது ஜெய்ஹோ பாடல் அதாவது இவர் ஆஸ்கர் விருது வாங்கிய அந்தப் பாடலுக்கு சுகிந்தர்சிங் தான் மெட்டுப் போட்டார் என்ற சர்ச்சையைக் கிளப்பினார் ராம்கோபால் வர்மா. இதை சுகிந்தர்சிங்கே இல்லை என்று சொல்லிவிட்டார். இந்த சர்ச்சை ஒருவரது புகழில் கல்லை விட்டு எறிவது மோசமான வியாதி. அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமானின் இந்தப் பதிவு ராம்கோபால் வர்மாவுக்கு எழுதின பதிலடியாகத் தான் எடுத்துக்கறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story