More
Categories: Cinema News latest news

சர்வதேச அளவில் விருதுபெற்ற இசைப்புயல்…. குவியும் வாழ்த்துக்கள்…..

கோலிவுட்டில் இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசைக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. அந்த அளவிற்கு பிரபலமான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவரது பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தொடர் வெற்றி காரணமாக கோலிவுட்டில் டாப் இசையமைப்பாளராக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Advertising
Advertising

a.r.rahman

இதுவரை தேசிய விருது, கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ள ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கில படத்திற்கு இசையமைத்ததற்காக உலக சினிமா துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்றார். மேலும் கடந்த 2010ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூஷன் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல விருதுகளை வென்று குவித்துள்ள ரஹ்மான் தற்போது மேலும் ஒரு சர்வதேச விருதை வென்றுள்ளார். அதன்படி எகிப்தில் நடைபெற்று வரும் 43வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

a.r.rahman

அடுத்தடுத்து பல உயரிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வரும் ரஹ்மானை இந்திய திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். ரசிகர்களும் தொடர்ந்து அவர்களின் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகிறார்கள்.

Published by
ராம் சுதன்

Recent Posts