Connect with us

Cinema News

அடிச்சு தூக்கும் ஆடுஜீவிதம்!.. 3 நாளில் இத்தனை கோடி வசூலா?.. மலைத்துப் போன மலையாள திரையுலகம்!..

பிளஸ்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. உலக அளவில் ஆடு ஜீவிதம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

1700க்கும் அதிகமான திரைகளில் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியானது. முதல் நாளில் உலக அளவில் 16.7 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக நடிகர் பிருத்திவிராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: இதுதான் என் ட்ரீம் புராஜெக்ட்!.. கடைசி வரை சூர்யாவை விடுறதா இல்லை போல கெளதம் மேனன்!..

இரண்டாம் நாள் முடிவில் ஆடு ஜீவிதம் திரைப்படம் சுமார் 30 கோடி ரூபாய் வசூலை கடந்தது. இந்நிலையில் சனிக்கிழமை ஆன நேற்றும் படத்திற்கு நல்ல வசூல் வந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை கண் கலங்கும் வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலை வன காட்சிகள் விஷுவல்ஸ் எல்லாம் வேறலெவல்.

பிரித்திவிராஜ், ராகுல், அமலாபால் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படத்திற்காக பிரித்திவிராஜ் போட்ட கடும் உழைப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. இந்திய சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி உலக அளவில் பலரும் பிரித்திவிராஜ் எப்படி இப்படி நடித்தார் என்றும் பிளஸ்ஸி 16 ஆண்டுகளாக போட்ட உழைப்பு வீண் போகவில்லை என்றும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: சுந்தர். சியால எல்லாமே பண்ண முடியும்!.. அரண்மனை 4 டிரெய்லர் ரிலீஸ்.. வெடிகுண்டை போட்ட தமன்னா!..

மூன்றாவது நாளான நேற்று இந்தியாவில் சுமார் 7 கோடி ரூபாய் வரை ஆடு ஜீவிதம் திரைப்படம் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 38 கோடி ரூபாயை இதுவரை எட்டியுள்ளது என்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை என்றும் ஆடு ஜீவிதம் திரைப்படம் நல்ல வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 50 கோடி வசூலை தாண்டுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top