இதுதான் என் ட்ரீம் புராஜெக்ட்!.. கடைசி வரை சூர்யாவை விடுறதா இல்லை போல கெளதம் மேனன்!..

மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கௌதம் வாசுதேவ் மேனன் சூர்யாவை வைத்து காக்க காக்க படத்தை இயக்கி மிகப்பெரிய இயக்குனராக தமிழ் சினிமாவில் உருவானார். அதன் பின்னர் மீண்டும் அவர் சூர்யாவை வைத்து இயக்கிய வாரணம் ஆயிரம் திரைப்படம் ரீ ரிலீஸ் சமயத்திலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

மீண்டும் எப்படியாவது சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த கௌதம் மேனன் தொடர்ந்து பலமுறை சூர்யாவுக்கு கதை சொல்லி அவருடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்து வந்தார்.

இதையும் படிங்க: தனுஷால கார்த்தி பட வாய்ப்பை இழந்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சு கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

சூர்யா தொடர்ந்து சிக்காமல் இருந்து வந்த நிலையில், கடைசியாக நவரசா எனும் 9 குறும்படங்கள் அடங்கிய ஆந்தாலஜி ஓடிடி படைப்புக்காக கௌதம் மேனனுடன் இணைந்தார். அந்த ஓடிடி தொடர் பெரிதாக ரசிகர்களை கவராத நிலையில், மீண்டும் கௌதம் மேனனுடன் இணைந்து சூர்யா எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை.

சூர்யாவுக்கு பதிலாக நான் நடிக்கிறேன் என நம்பிச் சென்று சியான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரிலீசாகாமல் கிடப்பில் கிடக்கிறது. நடிகராக மாறி அசத்தி வரும் கௌதம் மேனன் இயக்குனராக சொதப்பி வருகிறார்.

இதையும் படிங்க: கால் முளைத்த மாம்பழமாக நடந்து செல்லும் லாஸ்லியா!.. குழந்தை டிரெஸ் போட்டுக்கிட்டு ஊஞ்சல் ஆடுறாரே!..

கடைசியாக ஒரு இயக்கத்தின் வெளியான ஜோஷ்வா திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் சமீபத்தில் கௌதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் தனது ட்ரீம் புராஜெக்ட் குறித்துப் பேசியிருக்கிறார். துப்பறியும் ஆனந்தன் படத்தை இயக்குவதுதான் தனது வாழ்நாள் கனவு என்றும் அந்த படத்தில் நடிகர் சூர்யா தான் தனது தேர்வு என்றும் கூறியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பு சூர்யாவை வைத்து கௌதம் மேனன் துப்பறியும் ஆனந்தன் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், முழு படத்திற்கு இதுவரை சூர்யா சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story