Connect with us
ajith

Cinema News

புரடெக்‌ஷன் சாப்பாட்டில் இப்படி ஒரு விபரீதம் நடந்ததா? அஜித் செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

Actor Ajith: அஜித்தை பற்றி சமீபகாலமாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர் யாருடனும் பேசுவதில்ல. எந்த விழாவானாலும் எந்த பொது இடங்களுக்கும் வருவதில்லை என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதுவும் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூட அஜித்துக்கு நேரம் இல்லையா என இன்று வரை அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் இதைப் பற்றி அஜித் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வரவில்லை. ஏன் அதை கண்டுகொள்வதை போல் தெரியவும் இல்லை. இருந்தாலும் அஜித்துக்கு நெருக்கமானவர்கள் அவ்வப்போது அஜித்தை பற்றி அவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களை பற்றி பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: எனக்கு 19 கோடி ஓட்டு வர இதான் காரணம்!… நான் பிஆர்லாம் வைக்கல… நச்சென பதில் சொன்ன அர்ச்சனா!…

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித்தை பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார். அதாவது இந்த சம்பவம் நடந்து 15 வருடங்கள் ஆகிவிட்டதாம். ஒரு படத்தின் சூட்டிங்கின் போது இடைவேளையில் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களாம். அப்போது அந்த உணவில் ஏதோ ஒரு மாற்றம் அஜித்திற்கு தெரிந்திருக்கிறது.

அதாவது கெட்டுப் போன தன்மையில் இருப்பதை அஜித் உணர்ந்தாராம். உடனே அந்த சாப்பாட்டை தயார் செய்தவர்களை அஜித் அழைத்து கண்டித்தாராம். என் மனைவியின் கையால் சாப்பிடுவதை விட நீங்கள் தயார் செய்கிறதைதான் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் கவனம் செலுத்தாமல் இருந்தால் எப்படி?

இதையும் படிங்க: அந்த படம் தான் முக்கியம்!.. கமலால் தள்ளிப்போன ஹெச்.வினோத் திரைப்படம்!…

இதை சாப்பிட்டு எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்களின் நிலைமை என்னவாகும்? அதனால் இனிமேலாவது மிகவும் கவனமுடன் செயல்படுங்கள் என்று கண்டித்து கூறினாராம் அஜித். இப்படி தன் வேலையிலும் தன்னை நம்பி வருபவர்களின் நலனிலும் அக்கறை கொண்டவர் அஜித் என அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top