நடிகையை சோதித்து பார்க்க சந்திரபாபு செய்த வேண்டாத வேலை.. நடந்த ட்விஸ்ட்தான் வேற

Published on: March 27, 2024
chandra
---Advertisement---

Actor Chandrababu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் சந்திரபாபு. தனது நகைச்சுவையான நடனம் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த சந்திரபாபு அவரே பாட்டு பாட்டி நடிக்கவும் செய்வார். அவர் நடித்த படங்களில் அவரே பாடி நடித்திருக்கிறார். பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே பாடல் சந்திரபாபு பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடலாகும்.

எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் பல படங்களில் நடித்த சந்திரபாபு மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. நடிகைகளிடம் சகஜமாக பழகக் கூடியவர். அந்த வகையில் நடிகை சச்சுவுடன் ஒரு சகோதர மனப்பான்மையுடன் பழகி வந்தார்.

இதையும் படிங்க: கேட் ஏறி குதித்த கேப்டன் விஜயகாந்த்!.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு நெகிழ்ந்து போன இயக்குனர்..

பழம்பெரும் இயக்குனரான கே.வி. சுப்பிரமணியம் ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியை நடத்தி வந்தார். அதில் சந்திரபாபுவும் சச்சுவும் ஒன்றாக படித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில்தான் பாண்டித்தேவன் என்ற பெயரில் சுப்பிரமணியன் ஒரு படத்தை எடுத்தாராம். அதில் சந்திரபாபுவும் சச்சுவும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதிலிருந்து சச்சு வீட்டில் உள்ளவர்களுடன் நெருக்கமாக பழக கூடிய வாய்ப்பு சந்திரபாபுவுக்கு கிடைத்திருக்கிறது.

ஒரு சகோதரி போல நினைத்து பழகினாராம் சந்திரபாபு. திடீரென ஒரு நண்பர் சச்சு வீட்டிற்கு வந்து ‘ நேற்று நானும் சந்திரபாபுவும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சந்திரபாபுவுக்கு மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். நீங்கள் அவருக்கு சகோதரி போல என்று தெரிந்தும் உங்களிடம் சொல்ல வந்தேன்’ என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:தக் லைப் படத்தில் காலியான 2வது விக்கெட்!… அவருக்கு பதிலா நடிக்கபோவது அந்த நடிகராம்!..

இதைக் கேட்டதும் சச்சு சந்திரபாபுவை பார்க்க அவரது வீட்டிற்கு செல்ல அங்கு அவருக்கு காத்திருந்தது பெரிய அதிர்ச்சி. ஏனெனில் சந்திரபாபு நாற்காலியிம் அமர்ந்திருந்தாராம். அதன் பிறகுதான் தெரிந்திருக்கிறது சச்சுவை சோதனை செய்யவே சந்திரபாபு இவ்வாறு செய்தார் என்று. ஏன் இப்படி செய்தீர்கள் என சச்சு கேட்க ‘ நான் போய்விட்டால் எப்படி அழுவாய் என்று சோதிக்கவே இவ்வாறு செய்தேன்’ என கூறியிருக்கிறார் சந்திரபாபு. ஆனாலும் அதிலிருந்து தொடர்ந்து 2 மணி நேரம் சச்சு அழுது கொண்டுதான் இருந்தாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.