நானும் சித்ராவும் எப்படி தெரியுமா? 10 வருஷ லவ்! போட்டோலாம் இருக்கு - யாருப்பா இவரு?

தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால், பள்ளிக்கூடம் போகலாமே, எவன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் திலீபன் புகழேந்தி. எவன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அவர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது வைரலாகி வருகின்றது.

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சித்ரா. அவரின் மரணம் இன்று வரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. சித்ராவின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தான் இந்த திலீபன் புகழேந்தி. சித்ராவிற்கும் திலீபன் புகழேந்திக்கும் ஏழு வருட நட்பாம். இருவரும் சேர்ந்து நிறைய புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்களாம். அந்த புகைப்படங்கள் எல்லாம் திலீபன் இடம் இருக்கிறதாம் .ஆனால் அதை சமூக வலைதளங்களில் ஒரு தடவை கூட திலீபன் வெளியிடவில்லை. அதற்கு காரணம் சித்ராவை வைத்து நான் புகழ் தேட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என கூறி இருக்கிறார்.

chithu1

chithu1

ஆனால் அவர் ஒரு பெண்ணை கிட்டத்தட்ட பத்து வருடமாக காதலித்து இருக்கிறாராம். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்களாம் ஆனால் திலீபன் அந்தப் பெண்ணை காதலிக்கும் போதே மற்ற பெண்களுடனும் டேட்டிங் எல்லாம் செல்வாராம். அது தெரிந்து அந்தப் பெண் திலீபனை விட்டு பிரிந்து விட்டாராம். ஆனால் இதே தவறை நிறைய தடவை செய்திருக்கிறாராம் திலீபன். அந்த சமயங்களில் எல்லாம் அந்தப் பெண் இவரை மன்னித்து மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.

அதனால் இந்த முறையும் மன்னிப்பு கேட்க நான் தயாராக இல்லை என்றும் அந்தப் பெண் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்றும் கூறினார் திலீபன். மேலும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் பைனல் வரைக்கும் சென்று ஒரு போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டாராம் திலீபன். ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக அவரால் பிக் பாஸில் கலந்து கொள்ள முடியவில்லையாம்.

chithu

chithu

ஆனால் பிக் பாஸ் ஆறாவது சீசன் முடிந்த நிலையில் இந்த வருடம் தொடங்கும் ஏழாவது சீசனில் கண்டிப்பாக நான் உள்ளே வருவேன் என்றும் தொடர்ந்து ப்ரோமோக்களில் நான் இருப்பேன் என்றும் கூறி இருக்கிறார். அந்த அளவுக்கு பிக் பாஸ்க்காக நான் நிறைய பயிற்சிகள் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றும் பிக் பாஸில் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்பதை பார்க்கப் போகிறீர்கள் என்றும் மிகவும் கெத்தாக கூறினார் திலீபன். மேலும் இந்த திலீபன் புகழேந்தி தமிழ் சினிமாவில் மிகவும் கொடி கட்டி பறந்த கவிஞரான புலமை பித்தனின் பேரனும் ஆவார்.

இதையும் படிங்க : இந்த பாட்டை இப்படித்தான் பாடுவேன்.. ராஜா செய்த சித்துவேலை.. பாக்கியராஜ் படத்தில் நடந்த காமெடி..

 

Related Articles

Next Story