Hip pop Aadhi: சினிமாவைப் பொறுத்த வரைக்கும் எதுவும் நிலையானது கிடையாது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. அதுவும் இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறுவதும் நடிகர்கள் வில்லன்களாக மாறுவதும் என காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில் பல இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறி இருப்பது நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஜீவி பிரகாஷ், விஜய் ஆண்டனி ,ஹிப் பாப் ஆதி போன்றவர்கள் இசையில் அவர்களது திறமையை காட்டி வருகிறார்கள். இருந்தாலும் நடிப்பிலும் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இதில் ஹிப் பாப் ஆதியும் ஜிவி பிரகாஷும் நடிப்பு ஒரு பக்கம் மியூசிக் ஒரு பக்கம் என கிடைக்கிற நேரத்தில் இரண்டையுமே செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: மகாராஜா படம் 10 சித்தாவுக்குச் சமமாம்..! ரசிக்கறதுக்கு இவ்ளோ விஷயம் இருக்கா?
இந்த நிலையில் ஹிப் பாப் ஆதி சமீபத்தில் பேசிய போது அவருக்கு டாக்டரேட் பட்டம் கிடைத்திருப்பதாக கூறினார். அதுவும் முறையாக கல்வி கற்று பி எச் டி பட்டம் முடித்து இதை வாங்கியதாக கூறியிருக்கிறார். அதற்காக மூன்று வருஷம் சினிமாவில் பிரேக் எடுத்ததாகவும் கூறினார். இப்போது அந்தப் பட்டம் வாங்கி விட்டார்.
அடுத்த மூன்று வருடம் சினிமாவில் கவனம் செலுத்துவோம் என அரண்மனை 4, பி.டி.சார் போன்ற படங்களில் தனது இசைப் பணியை தொடங்கினாராம். அதன் பிறகு ஒரு மூன்று வருடம் தனது புதிய பயணத்தை தொடங்கப் போவதாகவும் கூறி இருக்கிறார் .அதாவது அவருடைய பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருந்து வருகிறார்களாம்.
இதையும் படிங்க: இனிமே எம்.ஜி.ஆர் அவ்வளவுதான்!.. கைவிட்ட சினிமா உலகம்!.. அப்புறம் நடந்தது இதுதான்!..
அதனால் தன் அப்பாவை போல தானும் அதே வழியில் போக இருப்பதாக ஆசைப்படுகிறேன் என கூறியிருக்கிறார் ஹிப் பாப் ஆதி. அதனால்தான் ஒரு கல்லூரிக்கு ஆசிரியராக போக வேண்டும் என்றால் முறையாக பி எச் டி பட்டம் பெற்று டாக்டரேட் வாங்கிய பிறகு தான் போக முடியும் .அங்கு போய் மாணவர்களுக்கு முறையாக சொல்லிக் கொடுக்க முடியும்.
அதன் காரணமாகவே தான் நான் இதை எடுத்து படித்து இன்று இந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன். அடுத்த மூன்று வருடம் என் அப்பா வழியில் நான் செல்ல விரும்புகிறேன் என ஹிப்பாப் ஆதி கூறி இருக்கிறார். இப்படி சினிமாவில் இருக்கும் சில பிரபலங்கள் சினிமாவிற்குப் பிறகு தங்களுக்கு என ஒரு தொழிலை நிரந்தரமாக வேண்டும் என எண்ணுகிறார்கள்.
இதையும் படிங்க: அஜித்துக்கு எப்படி மங்காத்தா படமோ அதே போல விஜய் சேதுபதிக்கு மகாராஜா!.. விஜய் நிலைமை தான் மோசம்!..
அது மட்டும் அல்லாமல் விஜய் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியலுக்கு செல்கிறார். இன்னொரு பக்கம் லாரன்ஸ் சினிமா ஒரு பக்கம் தனது சேவை ஒரு பக்கம் என இரண்டையும் சமமாக கவனித்து வருகிறார். இதற்கிடையில் ஹிப் பாப் ஆதியும் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…