உன் மாங்கல்யத்தை ஆசிர்வதிக்கும் வாய்ப்பை கொடு திரிஷா!.. ‘படுத்தேவிட்டானய்யா’ மொமெண்ட்டில் மன்சூர் அலிகான்!..

Mansoor alikhan: வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் லியோ படத்தில் எனக்கு ரேப் காட்சியே இல்லை. இருந்திருந்தால் ரோஜா, மீனா ஆகியோரை தூக்கி போட்ட மாதிரி திரிஷாவையும் அப்படியே அலேக்கா தூக்கி படுக்கையில் போட்டிருப்பேன் என பேச திரிஷாவுக்கு கோபம் வந்து மன்சூர் அலிகானை திட்டி டிவிட் போட்டார்.

மேலும், மன்சூர் அலிகானுடன் இணைந்து இதுவரை நான் எந்த படத்திலும் நடித்தது இல்லை. இனிமேல் எப்போதும் நடிக்க மாட்டேன் என காட்டமாக பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து பல நடிகைகளும் மன்சூர் அலிகானை திட்டினார்கள். மன்சூர் அலிகானுக்கு லோகேஷ் கனகராஜ் கண்டனம் தெரிவித்தார். அதோடு, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுப்போம் என நடிகர் சங்கமும் சொன்னது.

இதையும் படிங்க: சீனுராமசாமி அப்படி பட்டவர்தான்!… களத்தில் இறங்கி காலி செய்த மனிஷா யாதவ்..

இதில், கடுப்பான மன்சூர் அலிகான் ‘நான் எந்த உள்நோக்கத்திலும் அப்படி பேசவில்லை. சினிமாவில் கற்பழிப்பு காட்சியை உண்மையாகவா எடுக்கிறார்கள். அதுபோலத்தான் நான் பேசியதும். என்னை வேண்டுமென்றே டார்கெட் செய்கிறார்கள். ஒரு புதிய படத்தை எடுத்திருக்கிறேன். வரும் தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டிருக்கிறேன். எனவே, எனக்கு எதிராக வேலை செய்கிறார்கள்.

இதற்கெல்லாம் நான் பயப்பட போவதில்லை. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடன் நடிக்க மாட்டேன் என சொன்னதற்கு திரிஷா மீது நான்தான் அவதூறு வழக்கு தொடரவேண்டும்’ என்றெல்லாம் பொங்கினார். ஒருபக்கம், மகளிர் ஆணையம் சார்பில் மன்சூர் அலிகான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அதன்பின் மன்சூர் அலிகான் காவல் நிலையம் சென்று விளக்கமளித்தார். தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: காலக்கொடுமையே!.. கடல் பட ஹீரோயின் துளசியா இது?.. அக்கா கல்யாணத்துல இப்படி ஆளே மாறி நிக்கிறாங்களே!..

இந்நிலையில், ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள மன்சூர் அலிகான் ‘அடக்க நினைத்தால் அடங்கமறு.. ஆனால், இப்போது சொல்கிறேன் எனை மன்னித்துவிடு.. எனக்கு ஆதரவாக பேசிய அனைவருக்கும் நன்றி. மனசாட்சியே இறைவன். என்னை கேள்வி கேட்கும் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், நீட் அனிதாக்களுக்கும், வச்சாத்தி வன்கொடுமைகளுக்கும், மதக்கலவரங்களையும் சாட்டையடி கேள்வி கேட்க மறுக்கிறது.

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு.. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும் போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக! ஆமீன்’ என அந்த அறிக்கையில் மன்சூர் அலிகான் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மிஷ்கின் பேசுறப்போ இனிக்குது!.. மன்சூர் அலிகான் பேசினா கசக்குதோ.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!..

 

Related Articles

Next Story