Connect with us
mgr

Cinema History

படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் ஈகோவை டச் பண்ணிய நடிகை!.. கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா?…

செண்டிமெண்ட் பார்க்கும் பழக்கம் பல துறைகளிலும், பலரிடமும் இருந்தாலும் இது அதிகம் இருப்பது சினிமா துறையில்தான். நடிகைக்கு ரத்தக்காயம் பட்டுவிட்டால் படம் ஹிட், ஹீரோவுக்கு அடிபட்டு கீழே விழுந்துவிட்டால் படம் ஹிட் இப்படி கூட மொக்கையான செண்டிமெண்ட்டுகள் சினிமாவில் இருக்கிறது.

செண்டிமெண்ட் என்பது இப்போது அல்ல. சினிமா துவங்கிய காலம் முதலே இருக்கிறது. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கும். எம்.ஜி.ஆருக்கு கூட சில செண்டிமெண்ட் இருந்தது. அதன்படி நடிக்காவிட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும். அப்படி அவர் கோபப்பட்ட ஒரு சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம்.

இதையும் படிங்க: முதல்வராகி முதன் முதலாக சொந்த ஊருக்கு போன எம்.ஜி.ஆர்!.. மனம் கலங்கி நின்ற நெகிழ்ச்சி தருணம்!..

எம்.ஜி.ஆருடன் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை என்கிற பெருமையை பெற்றவர் கன்னடத்தை பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட சரோஜாதேவிதான். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கதாநாயகி இவர். சரோஜாதேவி தமிழ் சினிமாவில் அறிமுகமான போது தனது நாடோடி மன்னன் படத்தில் அவரை நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

saroja

ஒருபக்கம் ஜெயலலிதாவுடன் தொடர்ந்து நடித்தாலும் ‘ஜெயலலிதா வேண்டாம்’ என எம்.ஜி.ஆர் நினைக்கும்போதெல்லாம் அவரின் சாய்ஸ் சரோஜாதேவியாகவே இருந்தது. எங்க வீட்டு பிள்ளை, படகோட்டி, குடும்ப தலைவன், அன்பே வா, நான் ஆணையிட்டால், பாசம், பெரிய இடத்து பெண் என பல படங்களிலும் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி நடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு ஒரு செண்டிமெண்ட். தினமும் காலை படப்பிடிப்பு துவங்கும் போது முதல் காட்சியில் அவர்தான் நடிப்பார். இதை பல வருடங்களாக அவர் பின்பற்றி வந்தார். ஒருநாள் தான் அவசரமாக ஹைதராபாத் செல்ல வேண்டும் என சொல்லி சரோஜாதேவி முதல் காட்சியில் நடித்துவிட்டு அங்கிருந்து போய்விட்டார்.

இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..

மேக்கப் போட்டு வந்தபின்னர்தான் எம்.ஜி.ஆருக்கு இது தெரிந்தது. உடனே, கோபப்பட்டு மீண்டும் மேக்கப் அறைக்கு போய்விட்டார். தயாரிப்பாளர் அங்கு போய் அவரை சமாதானம் செய்ய முயன்றபோதும் திட்டி அனுப்பிவிட்டார்.

அதன்பின் ‘ஏன் இப்படி செய்தீர்கள்’ என அவர் தயாரிப்பாளரிடம் கேட்க அவரோ ‘எனக்கு இது பற்றி தெரியாது’ என சொல்லி இருக்கிறார். உங்களுக்கு தெரியாது என்றாலும் சரோஜாதேவிக்கு தெரியுமே’ என கோபப்பட்டிருக்கிறார். அதனால்தான் அரசகட்டளை படத்திற்கு பின் சரோஜாதேவியுடன் எம்.ஜி.ஆர் ஜோடி போட்டு நடிக்கவில்லை என் சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top