Connect with us
nagesh

Cinema History

உதவி செய்த பெண்ணுக்கு பணம் கொடுத்த நடிகர்.. அந்த பொண்ணு சொன்னதுதான் ஹைலைட்!…

Actor nagesh: தமிழ் சினிமாவில் காமெடிகளுக்கான அங்கீகாரத்தை உருவாக்கிய பங்கு பல காமெடி நடிகர்களுக்கு உண்டு. அந்த வகையில் காமெடி நடிகராய வலம் வந்தவர்தான் நடிகர் நாகேஷ். இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காமெடியனாக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவரின் காமெடிகள் அந்த கால மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. தனது காமெடிகளின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

இதையும் வாசிங்க:படம் முழுவதும் எடுத்த பின் ஹீரோவை மாற்றச் சொன்ன ஏவிஎம் செட்டியார்… அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!

மத்திய அரசு ஊழியராக இருந்த நாகேஷ் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் தனது வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவரின் முதல் திரைப்படம் மானமுள்ள மருதாராம். இப்படத்தின் மூலமாகவே இவர் சினிமாவில் நுழைந்தார். இதனை தொடர்ந்து தாயில்லா பிள்ளை, நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

அக்கால படங்களில் நடித்திருந்தாலும் இக்கால நடிகர்களுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். வசூல் ராஜா, அவ்வை ஷண்முகி, பூவெல்லாம் உன் வாசம் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் எம்ஜிஆருடன் இணைந்து காவல் காரன், விவசாயி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:சீடியை தூக்கி கொண்டு வாய்ப்பு தேடி அலைந்த அட்லீ!.. சினிமாவில் நுழைந்தது இப்படித்தான்!…

ஒரு முறை நாகேஷும் பிரபல தயாரிப்பாளரான பாலாஜியும் காரில் சென்று கொண்டிருந்தனராம். அப்போது திடீரென கார் பழுதாகிவிட்டதாம். அப்போது கார் ஓட்டுனர் அதனை சரி செய்து கொண்டிருக்க நாகேஷும் பாலாஜியும் ஒரு வீட்டிற்கு வெளியே இருட்டில் நின்று கொண்டிருந்தனராம். உடனே அந்த வீட்டில் இருந்த பெண் இருவரையும் அங்கே வந்து அமரும் படு அழைத்துள்ளார்.

இருவரும் சென்றுள்ளனர். அப்பெண் காஃபி போட்டு கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து கார் சரியானதும் இருவரும் அப்பெண்ணிற்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பியுள்ளனர். உடனே பாலாஜி தனது பையிலிருந்து 100ரூபாயை எடுத்து அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். அப்போது அப்பெண் எனக்கு தெரியும்ங்க.. எம்ஜிஆர்னா எப்போது பைசா கொடுக்காம போக மாட்டார். ரொம்ப நன்றி என கூறியுள்ளார். அதை கேட்ட பாலாஜி புரியாமல் முழித்துள்ளார். அப்போது நாகேஷோ, அட வாங்க, அவங்க எம்ஜிஆர்னுதான் நினைப்பாங்க… அவர் அந்த அளவு பெயர் வாங்கிட்டாரு.. என கூறி பாலாஜியை அழைத்து வந்துவிட்டாராம்.

இதையும் வாசிங்க:மானங்கெட்ட மன்சூர் அலிகான்!.. இப்படியா பேசுவ.. வச்சு விளாசிய திரிஷா.. துணைக்கு வந்த லியோ இயக்குநர்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top