Connect with us

Cinema News

மகள்கள் விஷயத்தில் இனி அந்த தவறை ரஜினி செய்ய மாட்டார்! பிரபலம் சொன்ன ஷாக் தகவல்

Actor Rajini: தமிழ் சினிமாவில் ரஜினி ஒரு மாபெரும் சக்தியாக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 40 வருடத்திற்கும் மேலாக தான் கட்டி வைத்த கோட்டையை இன்றுவரை பாதுகாத்து வருகிறார். ஆனால் அந்த கோட்டையை தன் மகள்களை வைத்தே ரஜினி உடைத்துவிடுவார் போல் தோன்றுகிறது. ரஜினியை போலவே அவருடைய இரு மகள்களும் சினிமா துறையில் தங்களை ஏதாவது ஒரு வகையில் முன்னுறுத்தி காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ஒரு இயக்குனராக இருக்கிறார். இளைய மகள் சௌந்தர்யா கார்ட்டூன் படித்துவிட்டு அவரும் இயக்குனராக இருக்கிறார். இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய நஷ்டத்தை அவருடைய தந்தைக்கு பரிசாக கொடுத்தது தான் மிச்சம்.

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் தன்னை யார் என்றே மறந்துபோன ஜனகராஜ்!. மனுஷனுக்கு இப்படி ஒரு நோயா!..

அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி அதுவும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த இரண்டு படங்களின் மூலம் அவர் பெரிய அளவில் நஷ்டத்தை அடைந்ததால் தற்போது சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் அவருடைய கணவர் தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கினார். அதுவும் தனுஷுக்கு ஓரளவு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அதை பின்தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கி பெரும் தோல்வியை சந்தித்தார். ஐஸ்வர்யாவுக்கு இரண்டு படங்களின் தோல்வி அவருக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிக்கும் என்று நினைக்கும் நேரத்தில் மீண்டும் அதே தவறை தன் அப்பாவை வைத்தே செய்தார். லால் சலாம் என்ற படத்தை ரஜினியை கேமியோ ரோலில் நடிக்க வைத்து அந்தப் படத்தையும் பெரும் நஷ்டத்தில் கொண்டு சென்றார்.

அதனால் இனிமேல் ரஜினி தன் மகள்கள் இயக்கும் படத்தில் நடிக்க மாட்டார் என்று பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். ஏற்கனவே பட்டது போதும் என்று நினைத்து ரஜினி மீண்டும் அதே தவறை இனி செய்யவே மாட்டார் என அவர் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top