Connect with us
16V Sathyajith

Cinema History

ஒரே படத்தோடு காணாமல் போன நடிகர் இவர் தான்… அப்புறம் என்ன ஆனார் தெரியுமா?

1977ல் பாரதிராஜாவின் கைவண்ணத்தில் உருவானது 16வயதினிலே படம். கமல், ரஜினி இணைந்து நடித்தனர். இதில் கமல் சப்பாணியாகவும், ரஜினி பரட்டையாகவும் நடித்து இருந்தனர். படத்தின் டைட்டில் கார்டுலேயே அவர்களது கேரக்டர்கள் பெயர் தான் இடம்பெற்றன.

மயிலாக நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பும், கமல் நடிப்பும் படத்தில் பல ரசிகர்களையும் கவர்ந்தன. ரஜினி பரட்டைத்தலையுடன் இது எப்படி இருக்கு என பஞ்ச் டயலாக் பேசும்போது செமயாக நடித்து இருந்தார். அதே போல் படத்தில் டாக்டராக வரும் கேரக்டரில் சத்யஜித் நடித்தார். இவருக்கும் இந்தப் படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

16 வயதினிலே படத்தில் டாக்டராக வந்து மயிலை மயக்கி தன் வலையில் வீழ்த்தியவர். அந்த ஒரு படத்தில் இவர் பேசும் நுனி நாக்கு ஆங்கிலம் அப்போதைய காலகட்டங்களில் அவரை பிரமிப்பாக பார்க்க வைத்தன. அந்த டாக்டராக நடித்தவர் தான் சத்யஜித். இவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

இதையும் படிங்க… அண்ணனை போல யாரும் இல்ல! விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா! வைரலாகும் புகைப்படம்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 1959ல் பிறந்த இவருக்கு சிறுவயதிலேயே கலைகள் மீது அதீத ஈடுபாடு உண்டு. பள்ளி, கல்லூரிகளின் கலைநிகழ்ச்சிகளில் தனது திறமையை நிலைநாட்டியுள்ளார்.

1977ல் சிவாஜி, கமல் நடித்த நாம் பிறந்த மண் படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்தார். அதே நேரம் திரைப்பட பயிற்சி கல்லூரியிலும் படித்து அசத்தியுள்ளார். அங்கு தங்கப்பதக்கம் பெற்றாராம். அவ்ளோ படிப்பு. அந்த செய்தி அன்றைய காலத்தில் பேப்பரில் வெளிவந்ததாம். அதைப் பார்த்த இயக்குனர் பாரதிராஜவுக்கு தான் கற்பனை செய்து வைத்திருந்த கேரக்டருக்கு அவரது உருவம் கச்சிதமாகப் பொருந்தியதாம். உடனே அவரை நடிக்க வைத்து விட வேண்டியது தான் என்று முடிவு செய்தார்.

அந்த வகையில் பாரதிராஜா தனது 16 வயதிலே படத்தில் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் படத்தைப் பார்த்ததும் அன்றைய பத்திரிகைகள் அவர் தமிழ்சினிமாவில் கொடிகட்டிப் பறப்பார் என்று எழுதினார்களாம். ஆனால் துரதிர்ஷ்டம். அவருக்கு அந்தப் படத்திற்குப் பிறகு எந்தவிதமான படங்களும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. டிவி சீரியல்களிலும் நடித்துப் பார்த்தார்.

இதையும் படிங்க… மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு முதன் முதலில் தீனி போட்ட படம்! வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான

அதன்பிறகு சத்யஜித் ஏழாவது மனிதன், அறுவடை நாள், பிக்பாக்கெட் என்று ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதன்பின் சத்யஜித் தமிழ்த்திரை உலகில் காணாமல் போனார். 2022ல் கன்னடப் படத்தை இயக்கி வருவது பற்றி பேசினார். அதுகுறித்து அவர் கூறும்போது என் கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது என்றாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top