ரஜினி கொடுத்த வாய்ப்பை யூஸ் பண்ணி இருந்தா 10 வீடு வாங்கி இருப்பேன்!. புலம்பும் செந்தில்...

Actor senthil: திரையுலகில் காமெடி நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களிலும் நடித்து சிரிக்கவைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்தான் நடிகர் செந்தில். கவுண்டமணியுடன் பல நூறு படங்களில் நடித்தவர் இவர். ரஜினி, கமல், சரத்குமார், சத்தியராஜ், பிரபு,கார்த்த்திக், விஜய், அஜித், சூர்யா என பலரின் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

senthil

ரஜினிக்கு செந்திலை மிகவும் பிடிக்கும். ஏனெனில், செந்தில் மிகவும் இன்னசன்ட்டான, சூது வாது ஏதும் தெரியாத, கள்ளம் கபடம் இல்லாத மனிதர். மனதில் வஞ்சமோ, கோபமோ, வன்மமோ வைத்துக்கொள்ளாமல் எளிமையாக பேசும், பழகும் சுபாவம் உடையவர். ரஜினியுடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: இந்த கிளைமேக்ஸ் தேறாது!.. ரஜினியிடமே சொன்ன சீனியர் நடிகர்!. அத மட்டும் கேட்டிருந்தா!..

குறிப்பாக வேலைக்காரன் படத்தில் ரஜினியோடு சேர்ந்து செந்தில் செய்த காமெடியை ரசிகர்கள் அப்படி ரசித்தார்கள். மேலும், வீரா, அருணாச்சலம், போன்ற பல படங்களிலும் ரஜியுடன் இணைந்து நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அதேபோல், ரஜினி நடித்து தர்மதுரை படத்தில் கவுதமியின் அப்பாவாகவும் குணச்சித்திர வேடத்தில் செந்தில் நடித்திருப்பார்.

senthil

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் நடித்த படையப்பா படத்தில் அவர் அடித்த லூட்டியை ரசிகர்கள் சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள். குறிப்பாக செந்தில் பெண் பார்க்க போகும்போது சேரில் விழந்ததால் ரஜினியுடன் உடையை அவர் போட்டுக்கொண்டு அவரின் உடையை ரஜினிக்கு கொடுத்துவிடுவார். ஆனால், அந்த பக்கம் வருபவரிடம் ‘இவர்தான் மாப்ள. ஆனா இவர் போட்ருக்க டிரெஸ் என்னோடது’ என ரஜினி பேசும் காமெடிக்கு தியேட்டரே சிரித்தது.

இதையும் படிங்க: ரஜினிக்கெல்லாம் வில்லனா நடிக்க முடியாது… மறுத்த நடிகருக்கு ஒரு சூப்பர் சான்ஸ் கொடுத்த ஏவிஎம்

ஆனால், இதே செந்தில்தான் அதிமுகவில் சேர்ந்து பிரச்சார மேடைகளில் ரஜினியை கடுமையாக விமர்சித்தார். ஆனால், ரஜினி கோபப்படவில்லை. அது அவரின் சூழ்நிலை என சொன்னார். இப்போது ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படம் துவங்கப்பட்டதும் மகளிடம் ரஜினி கேட்ட முதல் கேள்வி ‘செந்தில் இந்த படத்தில் இருக்காரா?’ என்பதுதான். லால் சலாம் படத்தில் செந்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய செந்தில் ‘பல வருடங்களுக்கு முன்பே ரஜினி என்னை தொடர்பு கொண்டு ‘செந்தில் ஒரு படம் தயாரியுங்கள். நான் நடிக்கிறேன்’ என சொன்னார். ‘படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். இதுவே போதும். தயாரிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என சொல்லிவிட்டேன். இப்போதுதான் அதன் மதிப்பு எனக்கு தெரிகிறது. அதை மட்டும் நான் செய்திருந்தால் சாலிகிராமத்தில் 10 வீடு வாங்கி இருப்பேன்’ என புலம்பினார் செந்தில்.

இதையும் படிங்க: ரஜினி பட வசூலை பார்த்து உருவான அஜித் படம்!.. கடைசியில் ரிசல்ட் இதுதான்!..

 

Related Articles

Next Story