தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சிவக்குமார்! சரியான அட்வைஸை கொடுத்து ஆஃப் செய்த தயாரிப்பாளர்

Actor Sivakumar: தமிழ் சினிமாவில் இப்போது மூத்த வயதில் இருக்கக் கூடிய நடிகர் என்றால் அது சிவக்குமார்தான். சினிமாவை விட்டு விலகினாலும் அவ்வப்போது சிவக்குமார் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

கந்தன் கருணை திரைப்படத்தில் முருகனாக நடித்த சிவக்குமாரை பார்த்து அனைவரும் வாயடைத்துப் போயினர். ஒரு வேளை முருகன் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று தோன்றும் அளவுக்கு மிக அழகாக இருப்பார் சிவக்குமார்.

இதையும் படிங்க; இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி…அரசியல் கட்சி தலைவராக விஜய் போட்ட முதல் ட்வீட்!…

அதனை தொடர்ந்து சிவாஜி, ஜெய்சங்கர் போன்றவர்களின் படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்து வந்த சிவக்குமாரை ஒரு சிறந்த நடிகராக மாற்றியது ‘ஆட்டுக்கார அலமேலு’ திரைப்படம்தான். அந்தப் படத்தில் சிவக்குமாரின் நடிப்பை பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டனர்.

அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த சிவக்குமாரை சரத்குமாரை போலவோ ரஜினி போலவோ கமலை போலவோ விருப்பப்படவில்லை. அதனாலேயே சின்னத்திரை பக்கம் சென்றார் . ஒரு ஒரு சில சீரியல்களில் சிவக்குமார் நடித்தார். அங்கு இருந்தும் விலகினார். பின் கம்பராமாயணம் , திருக்குறள் போன்றவற்றை பற்றி பல மேடைகளில் பாராயாணம் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரும் மிரட்டலான 7 படங்கள்!… ஹீரோவா ஹிட் கொடுப்பாரா!..

ஒரு பக்கம் ஒவியம், இன்னொரு பக்கம் யோகா என தன் மனதை எப்பொழுதுமே இளமையாகவே வைத்திருக்கிறார் சிவக்குமார். 86 வயதாகும் சிவக்குமார் இன்னும் அதே புத்துணர்ச்சியோடும் தெம்போடும் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் யோகாதான். ஆனால் சிவக்குமார் சமீபகாலமாக நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிறது.

இதை பற்றி பேசிய சித்ரா லட்சுமணன் சிவக்குமார் கொஞ்சம் கோபத்தை குறைத்தால் நல்லது என நினைக்கிறேன். பொதுவாகவே யோகா, தியானம் போன்றவற்றை செய்கிறவர்களுக்கு கோபம் வராது என சொல்வார்கள்.ஆனால் சிவக்குமார் அதிகமாகவே உணர்ச்சிவசப்படுகிறார். அதை மட்டும் செய்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: காக்க வைத்து கடுப்பாக்கிய பாக்கியராஜ்!.. கோபத்தில் வாலி சொன்னது என்ன தெரியுமா?!..

 

Related Articles

Next Story