இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்க சென்னைக்கு வந்த சூரி! அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Actor Soori:நேற்று சூரியின் நடிப்பில் கருடன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஒரு பக்கம் சுப்ரமணியபுரம் படத்தை போலவும் இன்னொரு பக்கம் நாடோடிகள் படத்தை போலவும் இருப்பதாக விமர்சனம் செய்தாலும் இந்த படத்தில் ஒரு முழு கதாநாயகனாக சூரி நடித்திருக்கும் அந்த நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இதுவரை ஒரு காமெடி நடிகராக எதார்த்தமாக நகைச்சுவை வசனங்களை பேசி மக்களை மகிழ்வித்து வந்த சூரி இப்படியும் நடிப்பாரா என்ற ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்கு முன் விடுதலை படத்தில் அவருடைய நடிப்பு பெருமளவு பேசப்பட்டது. அதன் பிறகு கருடன் திரைப்படத்தில் ஒரு முழு நேர கதாநாயகனாக நடித்திருக்கிறார் சூரி.

இதையும் படிங்க: அதிக முறை தேசிய விருது வாங்கிய நடிகர்கள்!.. சுள்ளான இருந்தும் சுளுக்கெடுத்த தனுஷ்!…

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு தியேட்டரிக்கல் 10 கோடியில் வாங்கியதாகவும் அதற்கு 20 கோடி அவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறதாம். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் சூரியை பற்றி ஒரு பிளாஷ்பேக்கை கூறி இருக்கிறார். ஆரம்ப காலங்களில் அவர் சொந்த ஊரில் இருக்கும் போதே மேடை நாடகங்களில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தாராம்.

எப்படியாவது சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்திருக்கிறார் சூரி. இடையில் அவருக்கு பெண்பார்க்கும் படலமும் நடந்திருக்கிறது. மிகவும் ஏழ்மையான வீட்டு பெண்ணை தான் சூரி திருமணம் செய்ய இருந்தாராம். சூரியின் நிச்சயமெல்லாம் நடந்து முடிய இவருடைய சினிமா ஆசையை தெரிந்து கொண்ட அவருடைய மாமனார் எப்படியும் திருமணத்திற்கு பிறகு சென்னைக்குத்தான் போவீர்கள்.

இதையும் படிங்க: பாரால் முதல் நாளே பெரிய பிரச்னை… பழனிசாமியால் மூச்சுவிட்ட பாக்கியா.. அப்போ அவ்வளவு தானா?

அதனால் வாடகைக்கு எல்லாம் வீடு பார்க்க வேண்டாம். என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு அங்கே ஒரு நல்ல வீட்டை அமர்த்தி விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். திருமணத்திற்கு முன்பே எப்படி மாமனாரிடம் கையேந்துவது என்ற யோசித்தாலும் சூரிக்கு அப்போது வேறு வழி தெரியவில்லையாம். அந்த பணத்தை வாங்கிக்கொண்டு சென்னைக்கு வந்தவர் அங்கு ஒரு சினிமாக்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இவருடைய நிலைமையை கூறி இருக்கிறார்.

உடனே அந்த சினிமாக்காரர் நான் வீடு பார்த்து தருகிறேன் என சூரி வைத்திருந்த பணத்தை வாங்கிக் கொண்டு இவரை அவர் சொந்த ஊருக்கு நம்பிக்கையுடன் அனுப்பி வைத்திருக்கிறார். சூரி ஊருக்கு வந்து தனக்கு பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து மனைவியோடு சென்னைக்கு வந்திருக்கிறார். எப்படியும் வீடு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்தவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.

இதையும் படிங்க: சண்டை போட்டு 40 வருடங்களாக நடிகையிடம் பேசாமல் இருந்த ஜெயலலிதா!.. பின்னணி இதுதான்!..

அந்த சினிமாக்காரர் சூரியிடம் தொடர்பு கொண்டு இந்த இடத்தில் வீடு இருக்கிறது போய் பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். சூரி தன் மனைவியுடன் அவர் சொன்ன இடத்தை போய் பார்க்க அங்கிருந்த ஒரு வீட்டுக்காரர் இந்த வீட்டுக்காக என்னிடம் யாரும் எந்த பணமும் கொடுக்கவில்லையே என சொல்லி பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

சூரி பணத்தை கொடுத்த அந்த சினிமாக்காரரும் எங்கு போனார் என்று தெரியவில்லையாம். இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த சூரிக்கும் அவரது மனைவிக்கும் இப்படி ஒரு கசப்பான சம்பவம் நடந்திருக்கிறது. அதன்பிறகு எங்கோ ஒரு குடிசை வீட்டில் தன் மனைவியுடன் இல்லற வாழ்க்கையை தொடங்கினாராம் சூரி.

இதையும் படிங்க: ரோகிணியை பத்தி ரோகிணிக்கிட்டையே அசிங்கமா பேசுறீங்களே விஜயா… நீங்களாம்?

இருந்தாலும் அவர் மனைவி இவையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சூரியின் மீது மிகுந்த நம்பிக்கையுடனே இருந்திருக்கிறார். அதன் பிறகு சென்னையில் பார்க்காத வேலைகளே இல்லையாம் சூரிக்கு. இப்படி தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் இழந்து சென்னைக்கு வந்த சூரி இப்போது மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார் என்றால் அவர் பட்ட கஷ்டங்கள் அடைந்த போராட்டங்கள் இவைகள் தான் காரணம் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

 

Related Articles

Next Story