சூர்யாவுக்கு என்ன ஆச்சுன்னு துடித்துப் போன ரசிகர்கள்!.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கங்குவா ஹீரோ!..

நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் சூர்யாவுக்கு தோள் பட்டையில் அடிபட்டு ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு என்ன ஆனது என துடித்துப் போன அவரது ரசிகர்கள் சூர்யா சீக்கிரம் குணமடைந்து மீண்டும் கங்குவா படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என கெட் வெல் சூன் சூர்யா என ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ஏகப்பட்ட பதிவுகளை போட ஆரம்பித்தனர்.

இதையும் படிங்க: மன்சூர் அலிகான் தப்பா ஒண்ணுமே பேசல!.. கிஸ் சீன் பத்தி ஹீரோயின் கேட்க மாட்டாங்க.. ரேகா நாயர் விளாசல்!

காலை முதல் அடிபட்ட வலியால் துடித்துக் கொண்டிருந்த சூர்யா ஓய்வு முடிந்த மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூசே முனிசாமி வீரப்பன் எனும் ஆவணப்படத்தின் தமிழ் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். உடனடியாக அதற்கு கீழ் குவிந்த சூர்யா ரசிகர்கள் நடிப்பின் நாயகனுக்கு என்ன ஆனது என விசாரிக்கத் தொடங்கினர்.

உடனடியாக அன்பான ரசிகர்களின் அன்பான அக்கறையை பார்த்து பூரித்துப் போன நடிகர் சூர்யா புதிதாக ஒரு நன்றி ட்வீட் போட்டு இப்போ பெட்டரா ஃபீல் பண்றேன். எதுவும் ஆகல, உங்களுடைய அன்பான கெட் வெல் சூன் மெசேஜ்களுக்கு நன்றி என ட்வீட் போட்டு ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

இதையும் படிங்க: ரஜினியை ஒதுக்கிய திரையுலகம்.. கைகொடுத்து தூக்கிவிட்ட கண்ணதாசன்!.. இவ்வளவு நடந்திருக்கா?!..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் 3டி படமான கங்குவா பிரம்மாண்டமாக 38 மொழிகளில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய தோற்றத்தில் போர் வீரனாக நடிகர் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story