தொட்டதெல்லாம் டிராப்!.. இப்படியே போனா சூர்யா நிலைமை என்னாகுறது!.. அப்செட்டில் ரசிகர்கள்..

Published on: June 12, 2024
surya
---Advertisement---

Actor Surya: தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் சூர்யா .இவர் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவருடைய 44வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார். படம் பெரிய அளவில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அந்த படத்தின் மீது ரசிகர்கள் அனைவரும் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சூர்யா நடிக்க இருந்த வரலாற்று படமான புறநானூறு திரைப்படம் அப்படியே டிராப்பானது அனைவருக்கும் தெரிந்திருக்கும். சுதா கொங்காரா உடன் மீண்டும் இணைந்து சூர்யா பணியாற்ற இருந்த திரைப்படம் தான் புறநானூறு.

இதையும் படிங்க: சிம்புவ பத்தி தப்பா பேசி வசமா மாட்டிய தயாரிப்பாளர்… ஆனாலும் கொஞ்சம் கூட ஃபீலாகலையே!

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப் போவதாக இருந்தது. ஆனால் ஏதோ சில பல காரணங்களால் இந்த படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் சூர்யா இந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் அவரின் இமேஜ் இன்னும் பெரிய அளவில் போயிருக்கும். இந்த நிலையில் சூர்யா ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்பட்டது.

அது மட்டுமல்லாமல் மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் சூர்யா ஹிந்தியில் படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஹிந்தியில் சூர்யாவை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை எடுப்பதாக திட்டமிட்டிருந்தார்கள்.

இதையும் படிங்க: தற்கொலை செய்து கொள்வேன்!.. மைக் மோகனை மிரட்டிய மனோபாலா!.. நடந்தது இதுதான்!..

அந்த படம் 600 கோடி பட்ஜெட்டில் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது இந்த கர்ணன் திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. ஹிந்தியில் அதுவும் சூர்யாவை வைத்து 600 கோடி பட்ஜெட் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதனால் இந்த படம் எடுப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று உறுதியாக தெரிகிறது. இப்படி சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ட்ராப்பாகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.