80களில் கோலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என ரசிகர்களிடம் பிரபலமானவர் தக்காளி சீனிவாசன். திகில் மற்றும் கொலை மர்ம கதைகளை அதிக அளவில் தயாரித்திருக்கிறார். இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம் உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம், ஃபிட்னஸ் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார்..
சூரசம்ஹாரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 2011ம் வருடத்திற்கு பின் தக்காளி சீனிவாசன் சினிமா உலகை விட்டு விலகி இருந்தார். மேலும், அனாதை குழந்தைகளுக்கு தத்தெடுத்து அவர்களுக்கென ஆசிரம் ஒன்றை நடத்தி சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார்.. இந்நிலையில் தற்போது அவர் காலமாகியுள்ளார். அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com





