Connect with us
vijay

Cinema News

இது அப்பவே சொல்லியிருக்கலாமே விஜய்!. சைலண்ட்டா இருந்து.. யூடர்ன் பண்ணி.. டேபிளை உடைச்சி!..

Vijay vs Rajini: தமிழ் சினிமாவில் ரஜினி – கமல், விஜய் – அஜித் என்பது போய் ரஜினி – விஜய் என இப்போது மாறிவிட்டது. விஜயும், ரஜினியும் அப்படி நினைக்கிறார்களோ இல்லையோ சினிமா உலகினரும், ரசிகர்களும் அப்படி கொளுத்தி போட்டு விட்டனர். அதற்கு காரணம் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜுவும், நடிகர் சரத்குமாரும்தான்.

சினிமாவில் தொடர்ந்து ஹிட் கொடுக்கும் நடிகர்கள் மற்றும் எந்த நடிகரின் படங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதிக வசூலை பெறுகிறதோ அவர்தான் சூப்பர்ஸ்டார். இந்த இடத்தை பல வருடங்களாக ரஜினி தன் கையில் வைத்திருக்கிறார். ரஜினியின் தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் அதிக வசூலை பெறவில்லை என்பதால் அவரின் மார்க்கெட் மதிப்பில் சற்று இறக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்துதான் ஒரு பேட்டியில் தில் ராஜுவும், வாரிசு பட விழாவில் சரத்குமாரும் ‘விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்’ என சொல்ல அது பற்றி எரிந்தது.

இதையும் படிங்க: காக்கா – கழுகு கதை விஜய்யை எந்தளவுக்கு பாதிச்சிருக்குன்னு பாருங்க!.. வெற்றி விழாவிலும் புலம்பிட்டாரே!..

அந்த விழாவில் சரத்குமார் உள்ளிட்ட சிலர் விஜயை சூப்பர்ஸ்டார் என பேச விஜய் அதை அமைதியாக ரசித்தார். விஜயின் அமைதி ‘சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வருவது சந்தோஷம்’ என்பது போல இருக்க, விஜய் ரசிகர்களும் அதை கையில் எடுத்துக்கொண்டு ரஜினி ரசிகர்களிடம் சமூகவலைத்தளங்களில் மல்லுகட்டினார்கள். 2 மாதங்கள் ஊடகங்களில் இந்த சூப்பர்ஸ்டார் விவாதமே அதிகமாக ஓடியது.

அதேநேரம், ஜெயிலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து நானே எப்போதும் சூப்பர்ஸ்டார் என சொல்லாமல் சொல்லிவிட்டார் ரஜினி. எனவே, லியோ படம் ஜெயிலர் பட வசூலை தாண்ட வேண்டும் என விஜய் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. காட்சிகள் புரியவில்லை, இரண்டாம் பாதி நன்றாக இல்லை என பலரும் கூறினர்.

இதையும் படிங்க: இந்திய சினிமாவே இன்னைக்கு விஜய்யை திரும்பி பார்க்குது!.. லியோ வெற்றி விழாவில் அர்ஜுன் செம ஸ்பீச்!..

இந்நிலையில்தான் இந்த படம் ரூ545 கோடி வசூல் செய்துவிட்டதாக அறிவித்துவிட்டு வெற்றிவிழாவை நேற்று நடத்தினார்கள். இந்த விழாவில் பேசிய விஜய் ‘சூப்பர்ஸ்டார்னா அது ஒருத்தர்தான்’ என பேசினார். விஜய் இப்படி பேசுவர் என அவரின் ரசிகர்களே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இதையடுத்து, இப்போது விஜய் சொன்னதை ‘வாரிசு’ பட விழாவிலேயே சொல்லியிருந்தால் சில மாதங்கள் இந்த சூப்பர்ஸ்டார் விவகாரத்தை யாரும் பேசியிருக்கவே மாட்டார்கள்.. ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்.. அப்ப சைலண்ட்டா இருந்துட்டு.. யூடர்ன் பண்ணி.. டேபிளை உடைச்சி.. இவ்வளவும் நடந்தபின் விஜய் இதை சொல்கிறார் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாரே வா!.. வசூலில் இங்க நான் தான் ராஜா என நிரூபித்த விஜய்!.. லியோ 12 நாளில் இத்தனை கோடி வசூலா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top