சிவாஜிக்கே நடிப்பு சொல்லி கொடுத்த தளபதி.. கடுப்பான சிவாஜி என்ன செஞ்சாரு தெரியுமா?..

நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனா அறிமுகமானவர் நடிகர் விஜய். இவர் தனது சிறு வயதிலிருந்தே நடித்து வருகிறார். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்குனரும் கூட. இவரது கடும் முயற்சியினாலே விஜய் சினிமாவில் பிரபலமடைந்தார்.

செந்தூரபாண்டி திரைப்படத்தில் விஜய் கேப்டனுடன் இணைந்து நடிக்க காரணமே இவரது தந்தை சந்திரசேகர்தான். இப்படத்தின் மூலம் விஜய் மக்களிடையே பிரபலமானார். பின் காதலுக்கு மரியாதை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் அந்த கால இளைஞர்கள் இவரின் ரசிகர்களாக மாறினர்.

இதையும் வாசிங்க:லியோ ஸ்பெஷல் ஷோவுக்கும் செக்!.. விஜய் ரசிகர்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!.

பின் பூவே உனக்காக, பிரியமானவளே போன்ற திரைப்படங்களின் மூலம் இவர் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார். விஜய் மேலும் கில்லி, திருமலை, சர்க்கார் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது வெற்றியை நிலைநாட்டினார். இவர் நடிப்பில் இந்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம்தான் லியோ. இப்படம் ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ஒன்ஸ்மோர். இப்படத்தில் இவருடன் இணைந்து சிவாஜிகணேசன் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். சிவாஜியுடன் தனது மகன் நடிக்க வேண்டும் எனும் ஆசையில் சிவாஜியிடம் சந்திரசேகர் பேசியுள்ளார். சிவாஜியும் சம்மதம் கூறிவிட்டாராம். பின் அப்படத்தில் சரோஜாதேவியிடம் ஸ்மார்ட்டாக நடந்து கொள்ள நினைக்கும் சிவாஜி தன்னை சற்று இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-சர்ட் என தனது உடையமைப்பை மாற்றுவார்.

இதையும் வாசிங்க:ஜோதிகாவை பார்த்து ரஜினி சொன்ன வார்த்தை!. அட அப்படியே நடந்துச்சே!. தலைவரு தீர்க்கதரிசிதான்!..

அப்போது ஒரு சீனில் விஜய் சிவாஜிக்கு ஜீன்ஸ் பேண்ட் போட்டால் இப்படித்தான் நடக்க வேண்டும் என கூறியுள்ளார். உடனே சந்திரசேகர் விஜயை பார்த்து முறைத்துள்ளார். ஆனால் சிவாஜியோ எப்படி நடக்க வேண்டும் சொல்லுங்க தம்பி என கேட்டுள்ளார். விஜய்யும் பின் நடந்து காட்டுயுள்ளார்.

சந்திரசேகர் விஜயை தனியாக அழைத்து அவரை திட்டியுள்ளார். அதை அறிந்த சிவாஜி சந்திரசேகரிடம் அவனை திட்டாதே…அவன் வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகனாக வருவான்…என கூறியுள்ளார். அவரின் கணிப்புபடியே விஜய் இன்று முன்னணி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இதையும் வாசிங்க:அந்த காலத்திலேயே சர்ச்சையை கிளப்பிய கமல் பட பாடல்… ஆண்டவரை காப்பாத்தினதே அவர்தானாம்!…

 

Related Articles

Next Story