More
Categories: Cinema News latest news

கேப்டனை நடிக்க வைக்க நடிகை பட்ட பாடு! கடைசியில் சண்டையில் முடிந்த சம்பவம்..

Captain Vijayakanth: நடிகர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரு நன்மை என்னவெனில் அவர்கள் இல்லாத போது அவர்கள் நடித்த படங்கள், பாடல்கள்தான் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு. இன்றளவும் எம்ஜிஆர் ரசிகர்கள் என ஏகப்பட்ட பேர் சுற்றி வருகிறார்கள். அவர்கள் செல்போனில் எம்ஜிஆர் நடித்த படத்தின் பாடல்கள்தான் ரிங் டோனாக இருக்கும். அப்படி எம்ஜிஆர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் படங்களாக பாடல்களாக இன்று வரை ரசிகர்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன.

அதே வரிசையில் விஜயகாந்தும் இப்போது இருக்கிறார். அவர் இறப்பிற்கு பிறகு விஜயகாந்தை பற்றி ஏகப்பட்ட நினைவலைகளை நாம் பார்த்து வருகிறோம். நினைவு கூர்ந்து வருகிறோம். பல யுடியூப் சேனல்கள் விஜயகாந்தை பற்றி சொல்லாத செய்திகளே இல்லை. நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தி வந்தவண்ணம்தான் இருக்கின்றன.

இதையும் படிங்க: கமல்ஹாசனையே பயப்பட வைத்த கவுண்டமணி!.. வேற ரூட்டில் காயை நகர்த்திய உலக நாயகன்..

இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு விஜயகாந்தை பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தியை கூறினார். குணச்சித்திர வேடத்தில் பின்னி பிடலெடுக்கும் நடிகை வடிவுக்கரசி. பல படங்களில் குணச்சித்திர நடிகையாக வில்லியாக நடித்து தனக்கென ஒரு மார்கெட்டை தற்போது வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு சமயம் வடிவுக்கரசி சொந்தமாக படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் விஜயகாந்தை பார்க்க வந்தாராம். ஏதோ சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விஜயகாந்தை பார்க்க வந்திருக்கிறார். இதை உணர்ந்த விஜயகாந்த் ஏதோ சொல்ல வருவதை போல் இருக்கிறதே? என்ன விஷயம் மேடம் என கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: வாட்ச் – அ காட்டி கன்ஃப்யூஸ் பண்ண லோகேஷ்! ரஜினி 171 பட போஸ்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்

அதற்கு வடிவுக்கரசி சொந்தமாக படம் எடுக்கலாம் என நினைக்கிறேன். அதற்கு ஹீரோவாக? என இழுத்திருக்கிறார். உடனே விஜயகாந்த் ஓ ஹீரோவாக நம்ம மோகன் சார் இருக்கிறாரே. அவர்தான் இப்போது டாப்பில் இருக்கும் ஹீரோ. அவரை போடலாமே என சொல்லியிருக்கிறார். அதற்கு வடிவுக்கரசி ‘இல்ல அவர் வேணாம். ’ என சொல்லியிருக்கிறார்.

இருந்தாலும் விஜயகாந்த் பல ஹீரோக்களின் பெயர்களை சொல்லிக் கொண்டே போனாராம். அவரை தடுத்து நிறுத்திய வடிவுக்கரசி இத்தனை ஹீரோக்கள் பெயரை சொல்லும் நீங்கள் ஏன் உங்கள் பெயரை சொல்லக் கூடாது? என கேட்டிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் ‘ஏன் நீங்கள் நடிக்கக் கூடாது’ என என்னிடம் நேரிடையாக நீங்கள் கேட்டிருக்கலாமே என செல்லமாக சண்டை போட்டுக் கொண்டார்களாம். அதில் இருந்து உருவான படம்தான் ‘அன்னை என் தெயவம்’. இந்தப் படத்தை வடிவுக்கரசிதான் எடுத்தாராம்.

இதையும் படிங்க: பாய்ஸ் படத்தில் ஜெனிலியா கேரக்டர் நான் தான் செஞ்சிருக்கணும்… ஆனா.. ரகசியம் சொன்ன வாரிசு நடிகை…

Published by
Rohini

Recent Posts