Connect with us
vijayakanth

Cinema News

கொலைமிரட்டல் விட்ட தயாரிப்பாளர்.. பயந்து கண்ணீர்விட்ட நடிகர்… கேப்டன் செஞ்ச தரமான சம்பவம்..

Vijayakanth: விஜயகாந்தை ஏன் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் அவர் எப்போதும் மற்றவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் மனிதராகவே இருந்தார். நடிகர் சங்க தலைவராக இருக்கும்போதே அவர் பல நடிகர்களுக்கும் உதவியிருக்கிறார் என பலரும் நினைப்பார்கள். ஆனால், அவர் சினிமாவில் நடிக்க துவங்கியது முதலே அப்படித்தான்.

முன்னணி நடிகராக மாறி தயாரிப்பாளர்கள் அவரை தேடி வர துவங்கியதுமே தனக்கு நல்லது என தோன்றுபவற்றை அவர் செய்ய துவங்கிவிட்டார். அவரின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகை என யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் உடனே அதில் தலையிட்டு தீர்த்துவைப்பார். விஜயகாந்த் படப்பிடிப்பு என்றாலே பாதுகாப்பு உணர்வு இருக்கும் என அவருடன் நடித்த பல நடிகர்களும் சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: நான் சொல்ற சம்பளத்துல நீங்க நடிப்பீங்களா?!.. விஜயகாந்திடம் எகிறிய வடிவேலு..

லைட் பாய்க்கு சாப்பாடு போகவில்லை என்றாலும் அதில் தலையிடுவார் விஜயகாந்த். தான் சாப்பிடும் உணவை படப்பிடிப்பில் எல்லோரும் கிடைக்க வேண்டும் என சொல்லி அதற்கான செலவை தனது சம்பளத்தில் பிடிக்க சொன்னவர்தான் விஜயகாந்த. அப்படிப்பட்ட விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பிரபல நடிகருக்கு உதவி சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

shyam

12பி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ஷ்யாம். அடுத்து சில படங்களில் நடித்தபோது ஒரு படத்தில் இவருக்கான சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்கவில்லை. சம்பளம் கொடுத்தால்தான் டப்பிங் பேச வருவேன் என ஷ்யாம் சொல்லிவிட, ‘நீ உயிரோடு இருக்கிறாராயா பார்த்துவிடலாம்’ என மிரட்டியிருக்கிறார் தயாரிப்பாளர். அந்த தயாரிப்பாளர் சினிமாவில் பெரிய புள்ளி. படைபலம் உள்ளவர்.

இதையும் படிங்க: சந்தானம் படத்தில் அட்ஜெஸ்மெண்ட் கேட்ட அப்பா வயது இயக்குனர்!.. பகீர் கிளப்பும் யாஷிகா ஆனந்த்…

எனவே, அவரால் தனது உயிருக்கு பிரச்சனை ஏற்படுமோ என பயந்த ஷ்யாம் ஒரு வாரம் வீட்டிலேயே தங்காமல் காரில் சுற்றி சுற்றி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் விஜயகாந்திடம் போகலாம் என முடிவெடுத்து தொலைப்பேசியில் அவரிடம் பேசியிருக்கிறார். முழுவதும் கேட்ட விஜயகாந்த் ‘நீங்க போய் உங்க வீட்டில் நிம்மதியா தூங்குங்க. நாளைக்கு காலையில உங்க சம்பளம் உங்க வீட்டுக்கு வரும். அப்புறம் போய் டப்பிங் பேசுங்க’ என சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.

அவர் சொன்னபடியே அடுத்தநாள் காலை ஷ்யாமின் வீட்டுக்கு அவரின் சம்பளம் போய்விட்டது. உடனே விஜயகந்தை பார்க்க வந்த ஷ்யாம் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி கூறியுள்ளார். வளரும்போது என்னையும் இப்படி மிரட்டி இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் நான் வந்தேன். நீ எதுக்கும் பயப்படாத. நான் நடிகர் சங்கத்தோட தலைவர். உன் பிரச்சனையை சரி செய்வது என் கடமை. தைரியமா இரு’ என தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தாராம் விஜயகாந்த்.

இதையும் படிங்க: ரஜினியின் 100வது படத்தை இயக்க மறுத்த பிரபல இயக்குனர்!.. நடந்தது இதுதான்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top