விஜயகாந்தை பார்த்து பயந்த படக்குழு!.. அசால்ட்டா டீல் செய்த நடிகர்!.. அட அந்த படமா?!..

Vijayakanth: மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர்தான் விஜயகாந்த். அப்போது அவரின் பெயர் விஜய ராஜா. சினிமாவுக்காக விஜயகாந்த் என வைத்துகொண்டார். பல இடங்களிலும் அவமானப்பட்டுத்தான் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவரை பலரும் அசிங்கப்படுத்தினார்கள். வாய்ப்பு கொடுக்க மறுத்தார்கள்.

அவருடன் ஜோடியாக நடிக்க அப்போது முன்னணியில் இருந்த நடிகைகள் மறுத்தார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் சினிமாவில் நடித்து தனி முத்திரை பதித்தார் விஜயகாந்த். துவக்கத்தில் நடித்த சில படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமையவில்லை. எனவே, விஜயகாந்தை வைத்து படமெடுக்க வேண்டாம் என இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் பலரும் பயமுறுத்தினார்கள்.

இதையும் படிங்க: என்ன சொன்னாலும் விஜயகாந்துதான் ஹீரோ!.. நெருக்கடியையும் தாண்டி சாதித்த இயக்குனர்..

எனவே விஜயகாந்திற்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. அப்போதுதான் அவரை நம்பி எஸ்.ஏ.சந்திரசேகர் ‘சட்டம் ஒரு இருட்டறை’ எனும் படத்தை இயக்கினார். இந்த படம் வெற்றியடையவே விஜயகாந்துக்கு வாய்ப்புகள் வந்தது. அதன்பின் விஜயகாந்தின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 100 படங்களுக்கும் மேல் நடித்து புரச்சிக்கலைஞராகவும் விஜயகாந்த் மாறினார்.

விஜயகாந்துக்கு நேரத்தை வீணடிப்பது என்பதும் எப்போதும் பிடிக்காது. ஷாட் ரெடி என தன்னை அழைத்தால் உடனே வந்து நடிப்பார். அப்போது அவரை வைத்துகொண்டு லைட் செட் பன்ணி கொண்டிருந்தால் கடுப்பாகி விடுவார். எல்லாம் தயாரான பின்னர்தான் அவரை அழைக்க வேண்டும் என நினைப்பார்.

இதையும் படிங்க: நைட்டு ஃபுல்லா வேற படம்!.. பகலில் சின்னக்கவுண்டர்!.. விஜயகாந்த் எனர்ஜியை பார்த்து மிரண்டு போன பிரபலம்…

செந்தூரப்பூவே படத்தில் விஜயகாந்துடன் நடித்தவர் நடிகர் ராம்கி. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த அவர் ‘ அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஷாட் ரெடி என விஜயகாந்தை அழைக்கவே எல்லோரும் பயப்படுவார்கள். அவரை அழைக்க என்னை போக சொல்வார்கள்’.

ramki

நான் போய் ‘கேப்டன் ஷாட் ரெடி’ என சொன்னதும் ‘டேய் எல்லாம் ரெடியா இருக்கா?. நான் வந்து நின்ன பின்னாடி லைட் இல்ல.. ல்ஃப்ட், ரைட்னு எதாவது சொன்னா எனக்கு கோபம் வரும்’ என சொல்லுவார். ‘எல்லா ரெடியா இருக்கு கேப்டன் வாங்க’ என சொல்லி கூலாக அவரை அழைத்து வருவேன். அவருக்கு நேரத்தை வீணடிப்பது என்பது பிடிக்காது. எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பார்’ என ராம்கி கூறினார்.

 

Related Articles

Next Story