நீ ஏற்கனவே செஞ்சது போதும்பா சாமி! இத்தனை வருஷத்துல இத பண்ணியா? வைரலாகும் விஷால் தந்தையின் பேட்டி

Actor Vishal: தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதி என்ற பெயருக்கேற்ப விஷாலின் செயல்பாடுகள், நடத்தைகள் என பம்பரமாய் சுற்றுவது போலத்தான் தெரியும். சினிமாவிலேயும் விஷால் நடிக்கும் போது ஒரே பரபரப்பாகத்தான் காணப்படுவார்.

இந்த நிலையில் திடீரென விஷால் கொடுத்த அறிக்கை ரசிகர்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் வருகை குறித்து இப்பவே ஒரு ஹிண்டை கொடுத்திருக்கிறார் விஷால். எப்போதுமே அவர் அவருடைய ரசிகர் மன்றத்தை சாதாரண மன்றமாக கருதியதில்லையாம்.

இதையும் படிங்க: தற்கொலை ஒன்றே சரி.. சந்திரபாபுவும் அவரின் மனைவியும் எடுத்த முடிவு!.. காப்பாற்றிய இயக்குனர்…

மக்களுக்கு பணி, சேவை ஆற்றும் ஒரு சமூக பொறுப்புள்ள ரசிகர்களாகத்தான் விஷால் இன்றுவரை அவர்களை பயன்படுத்தி வருகிறாராம். தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் அவர் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வாராம்.

வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று அந்த அறிக்கையில் விஷால் குறிப்பிட்டதில் இருந்து பார்க்கும் போது விஜயை தொடர்ந்து விஷாலும் கூடிய விரையில் அரசியலில் முழுமையாக இறங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: இந்த மாதிரி பண்ணலாமா? அரசியலுக்காக தன் மதிப்பையே கெடுத்துக்கிட்ட விஜய்.. பொங்கி எழும் பிரபலம்

இந்த நிலையில் விஷாலின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டி விஷாலின் அரசியல் வருகை குறித்து ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் .அஜித் ,விஜய் மாதிரி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்.

திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலான பிறகு அரசியலுக்கு வந்தால் நல்லது என அந்த பேட்டியில் ஜி.கே. ரெட்டி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இதனால்தான் உங்கள் படத்தில் வேலை செய்யவில்லை!.. பி.சி.ஸ்ரீராம் சொன்னதை கேட்டு நெகிழ்ந்து போன ஷங்கர்..

 

Related Articles

Next Story