Connect with us
abi

Cinema News

அஜித் இப்படி சொல்லுவாருனு நினைச்சு கூட பார்க்கல! ‘நாடோடி’ பட நடிகை பகிர்ந்த சூப்பர் தகவல்

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மதிக்கத்தக்க நடிகராக இருந்து வருகிறார் நடிகர் அஜித். பொது வெளியில் அதிகம் தெரியாத நடிகராக இருந்தாலும் அவருடன் பழகிய பிரபலங்கள் மூலமாக அஜித்தின் பல நல்ல விஷயங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதுமட்டுமில்லாமல் அவர் சொந்தமாக ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலமாகவும் பல உதவிகளையும் செய்து கொண்டு வருவதாக செய்திகள் வெளியானது. தன் வீட்டில் வேலை பார்க்கும் பணியாட்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்ததாகவும் வேலை பார்த்த பணியாட்களே சொல்லக் கேட்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: நீங்க உருட்டுங்க… மீண்டும் கல்யாண சீன் வச்சிராதீங்கப்பா.. பாக்கியலட்சுமி டீமை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

இப்படி அமைதியாக இருந்து பல நல்ல நல்ல செயல்களை செய்து வரும் அஜித்தை பற்றி ஒரு பேட்டியில் நாடோடி பட புகழ் அபிநயா ஒரு சில விஷயங்களை பகிர்ந்தார். அபிநயாவால் பேசவும் கேட்கவும் முடியாது. இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனித் திறமை இருக்கிறது.

அதனால்தான் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். ஆனால் நடிப்பில் கெட்டிக் கார பெண்ணாக அபிநயா இருந்து வருகிறார். அஜித் நடித்த வீரம் திரைப்படத்தில் பூங்கோதை என்ற கதாபாத்திரத்தில் அபிநயா நடித்திருப்பார்.

இதையும் படிங்க: காசு இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா?… ஞானவேல்ராஜாவை கிழித்தெடுத்த எஸ்.வி.சேகர்…

அப்போது வீரம் படம் சூட்டிங்கில் இருந்த போது கேரவனில் அபிநயா தன் தந்தையுடன் உள்ளே இருந்தாராம். வெளியே இருந்து ஒருவர் கேரவனை தட்ட உள்ளே வரலாமா என கேட்டு அஜித் கேரவனுக்குள் வந்தாராம். அப்போது ஹாய்.. நான் அஜித்குமார் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம் அஜித்.

மேலும் அபிநயாவிடம் உங்களுக்கு எதாவது இஸ்யூஸ் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தானாகவே முன்வந்து கூறியது அபிநயாவிற்கும் அவரது தந்தைக்கும் பெரும் ஆச்சரியமாக இருந்ததாம்.

இதையும் படிங்க: விசித்ரா கையால அவார்ட் வாங்குறப்போ வெட்கமா இருந்துச்சு… பிரபல சீரியல் நடிகை சொன்ன ஷாக் தகவல்…

மேலும் படப்பிடிப்பில் அபிநயா சீன் இல்லை என்றாலும் அபி எங்கே என கேட்டு தன் அருகில் அமர வைத்து பேசிக் கொண்டிருப்பாராம் அஜித். சினிமாவில் ஒரு நல்ல உயரத்தில் இருக்கும் அஜித் இப்படியெல்லாம் இருப்பாரா என பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது என அபிநயாவின் தந்தை கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top